அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால், மக்கள் உதவுவார்கள்: சொல்கிறார் சரத்பவார்
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால், மக்கள் உதவுவார்கள்: சொல்கிறார் சரத்பவார்

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால், மக்கள் உதவுவார்கள்: சொல்கிறார் சரத்பவார்

Updated : ஜூன் 10, 2023 | Added : ஜூன் 10, 2023 | கருத்துகள் (19) | |
Advertisement
மும்பை: அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால், நாட்டு மக்கள் உதவுவார்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.தலைவர்கள் நியமனம் சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்து, பின்னர் தனது அறிவிப்பை திரும்ப பெற்றார் சரத் பவார். கட்சியின் எதிர்கால நலனை கருத்தில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால், நாட்டு மக்கள் உதவுவார்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.




latest tamil news


தலைவர்கள் நியமனம்


சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்து, பின்னர் தனது அறிவிப்பை திரும்ப பெற்றார் சரத் பவார். கட்சியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தற்போது புதிய பதவியை உருவாக்கி தலைவர்களை சரத்பவார் இன்று(ஜூன் 10) நியமித்துள்ளார். அதன்படி பிரபுல் படேல், சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே ஆகியோர் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.



பின்னர் நிகழ்ச்சியில் சரத்பவார் பேசியதாவது:

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். இந்த நாட்டு மக்கள் உதவுவார்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். வரும் ஜூன் 23ம் தேதி, பீஹாரில் அனைவரும் கூடி, விவாதித்து, ஒரு முடிவு எடுக்க உள்ளோம். நாடு முழுவதும் பயணம் செய்து, அதை மக்களுக்கு புரிய வைப்போம்.



latest tamil news

உங்கள் அன்பின் காரணமாக, எனது ராஜினாமாவை திரும்பப் பெற்றேன். கட்சியின் மூத்த தலைவர்கள் நிறைவேற்றிய தீர்மானத்தையும் நான் மதிக்கிறேன். கல்வி, விவசாயம், ஒத்துழைப்பு, விளையாட்டு மற்றும் கலாச்சாரம் போன்ற துறைகளில் மேலும் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்ய உள்ளேன். இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், பழங்குடியினர் தொடர்பான பிரச்னைகளிலும் கவனம் செலுத்த உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (19)

மணியன்,திருப்பூர். மத்தியில் ஆட்சியை பிடித்தால் சரத்பவார் தான் புதிதாக ஏற்படுத்தப்படும் மத்திய கமிஷன் பங்கீட்டு குழு தலைவர்.எந்தெந்த வேலைக்கு எவ்வளவு கமிஷன் என்பதை நிர்ணயம் செய்து அரசுக்கு பரிந்துரை செய்வது மற்றும் கட்சி வாரியாக கமிஷனை பிரிப்பது அதன் பணியாகும்.திமுக பாலு,தெலங்கானா கவிதா,ஆம் ஆத்மி சிசோதியா,அகிலேஷ்,நித்திஷ்,அபிஷேக் பானர்ஜி,சஞ்சய் ராவூத் ஆகியோர் இந்த குழுவின் மற்ற உறுப்பினர்கள்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
10-ஜூன்-202320:20:53 IST Report Abuse
M  Ramachandran நீங்கள் நேர்மையான நபரல்ல உஙகளை சார்ந்திருக்கும் மற்ற கட்சிகளும் பதவி வெரியால் அழிந்து கொண்டிருக்கிறது . மக்கள் நலம் முக்கிய மல்ல
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
10-ஜூன்-202320:05:08 IST Report Abuse
Ramesh Sargam அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால்...? அங்குதான் இருக்கிறது உங்களின் ஒற்றுமை. ஒன்றாவது, இணைவதாவது..? எல்லாம் பகல் கனவு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X