கோடிக்கணக்கில் மோசடி: நகைக்கடை உரிமையாளர்கள் கைது
கோடிக்கணக்கில் மோசடி: நகைக்கடை உரிமையாளர்கள் கைது

கோடிக்கணக்கில் மோசடி: நகைக்கடை உரிமையாளர்கள் கைது

Added : ஜூன் 10, 2023 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை: சென்னை, முகப்பேரில் ஏ.ஆர்.டி., ஜூவல்லர்ஸ், ஏ.ஆர்.டி., டிரஸ்டட் பிராபிட் கம்பெனி உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. அதேபகுதியை சேர்ந்த ஆல்வின் ஞானதுரை, ராபின் ஆரோன் ஆகியோர் நடத்தி வந்தனர்.இவர்கள், பொது மக்களுக்கு அதிக வட்டி தருவதாக 427 பேரிடம் 6.30 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டனர். இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Fraud worth crores: Jewelery shop owners arrested  கோடிக்கணக்கில் மோசடி: நகைக்கடை உரிமையாளர்கள் கைது

சென்னை: சென்னை, முகப்பேரில் ஏ.ஆர்.டி., ஜூவல்லர்ஸ், ஏ.ஆர்.டி., டிரஸ்டட் பிராபிட் கம்பெனி உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. அதேபகுதியை சேர்ந்த ஆல்வின் ஞானதுரை, ராபின் ஆரோன் ஆகியோர் நடத்தி வந்தனர்.


இவர்கள், பொது மக்களுக்கு அதிக வட்டி தருவதாக 427 பேரிடம் 6.30 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டனர். இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆல்வின் ஞானதுரை மற்றும் ராபின் ஆரோன் நடத்தி வந்த நிறுவனங்கள் மீது சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் 50க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். இதனால், இருவரும் தலைமறைவாகினர். இருவர் தொடர்புடைய இடங்களிலும் போலீசார் சோதனை நடத்தினர்.


இந்நிலையில், தலைமறைவாக இருந்த ஆல்வின் மற்றும் ராபினை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இருவரையும், அவர்கள் தொடர்புடைய இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதுடன், மக்களிடம் மோசடி செய்த பணத்தை எங்கு பதுக்கி வைத்துள்ளனர்? வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளனரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (8)

shakti - vilupuram,கோட்டி டி'ஐவைரி
12-ஜூன்-202318:55:53 IST Report Abuse
shakti எல்லாம் ஏசப்பா மகிமை ...
Rate this:
Cancel
p.seetharaman - tirupur,இந்தியா
12-ஜூன்-202310:58:56 IST Report Abuse
p.seetharaman பேராயர் என்ன ஆண்டவன் என்ற என்ன மனிதன் தானே .கடவுள் என்று மக்கள் நினைக்கிறார்கள் .முட்டாள் ஜனங்கள் .பாவமன்னிப்பு செய்யும் சேட்டை தாங்கமுடியவில்லை
Rate this:
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,சிங்கப்பூர்
10-ஜூன்-202320:53:49 IST Report Abuse
கதிரழகன், SSLC ஆயர் பேராயர் எல்லாரும் பாவ மன்னிப்பு கொடுத்தப்புறமும் கோர்ட்டு கேசு ன்னு இழுக்க கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X