அறிவித்தபடி வேலை நிறுத்த போராட்டம்:லஞ்சத்துக்கு எதிராக பத்திர எழுத்தர்கள் திட்டவட்டம்
அறிவித்தபடி வேலை நிறுத்த போராட்டம்:லஞ்சத்துக்கு எதிராக பத்திர எழுத்தர்கள் திட்டவட்டம்

அறிவித்தபடி வேலை நிறுத்த போராட்டம்:லஞ்சத்துக்கு எதிராக பத்திர எழுத்தர்கள் திட்டவட்டம்

Added : ஜூன் 10, 2023 | கருத்துகள் (20) | |
Advertisement
பல்லடம்;அறிவித்தபடி வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கும் என, லஞ்சத்துக்கு எதிராக பல்லடம் பத்திர எழுத்தர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக முதல்வர் தனிப்பிரிவு, பதிவுத்துறை ஐ.ஜி., உட்பட பலருக்கும் பத்திர எழுத்தர்கள் புகார் அனுப்பியுள்ளனர். இது தொடர்பான நடவடிக்கை இல்லாததை தொடர்ந்து, ஜூன்
 Strike as announced:: Bond Clerks Plan Against Bribery   அறிவித்தபடி வேலை நிறுத்த போராட்டம்:லஞ்சத்துக்கு எதிராக பத்திர எழுத்தர்கள் திட்டவட்டம்

பல்லடம்;அறிவித்தபடி வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கும் என, லஞ்சத்துக்கு எதிராக பல்லடம் பத்திர எழுத்தர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.


திருப்பூர் மாவட்டம், பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக முதல்வர் தனிப்பிரிவு, பதிவுத்துறை ஐ.ஜி., உட்பட பலருக்கும் பத்திர எழுத்தர்கள் புகார் அனுப்பியுள்ளனர். இது தொடர்பான நடவடிக்கை இல்லாததை தொடர்ந்து, ஜூன் 12 முதல் ஒரு வாரத்துக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக பத்திர எழுத்தர்கள் அறிவித்தனர்.

இதற்கிடையே, இன்று பதிவுத்துறை டி.ஐ.ஜி., சாமிநாதன் நேரடி விசாரணை மேற்கொண்டார். பத்திர எழுத்தர்கள், வக்கீல்கள் மற்றும் பதிவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது.


பத்திர எழுத்தர்கள் கூறியதாவது: தமிழகத்தில் எங்கும் இல்லாதபடி பல்லடத்தில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது சென்ட் ஒன்றுக்கு ஆயிரம் முதல் பத்திர மதிப்பை பொறுத்து பல லட்சங்கள் லஞ்சம் நிர்ணயிக்கப்படுகிறது.


தமிழகத்தில் எங்காவது இது போன்ற போராட்டம் நடந்துள்ளதா. பத்திர எழுத்தர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு அலுவலகத்தின் மீது குற்றம் சாட்டுகிறோம் என்றால், அது குறித்து அதிகாரிகள் யோசிக்க வேண்டும் மிகவும் கொதித்துப் போய் தான் இந்த போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். வெறும் கண்துடைப்புக்காக இந்த விசாரணை நடக்கிறது. லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பத்திரப்பதிவு என்ற நிலை இங்கு உள்ளது. இது மக்களுக்கான அலுவலகம் கிடையாது. பதிவாளர்கள் பிரவீனா மற்றும் ஈஸ்வரி ஆகியோரை உடனடியாக பணியிடமாற்றம் செய்ய வேண்டும். அடுத்து வரும் பதிவாளருக்கு உரிய ஒத்துழைப்பு வழங்குவோம் என்றனர்.



தவறு செய்தது யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் ஆதாரங்களை எடுத்து வாருங்கள் உரிய விசாரணைக்கு பின் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன் என டி.ஐ.ஜி., கூறினார் இதை ஏற்காத பத்திர எழுத்தர்கள், நீங்கள் அதிகாரிகளுக்கு ஆதரவாகவே பேசுகிறீர்கள். இதில், எங்களுக்கு உடன்பாடு இல்லை. நாங்கள் அறிவித்தபடி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி வெளியேறினர். தொடர்ந்து ஜூன் 26 அன்று ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என டி.ஐ.ஜி., கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (20)

Jahir - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஜூன்-202316:49:41 IST Report Abuse
Jahir உண்மையில் பத்திரம் எழுதக்கூடிய எழுத்தர்கள் தான் பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச லாவண்யம் அதிகரிக்கிறது பொது மக்கள் பத்திரப்பதிவுக்கு வரும்போது மற்றும் திருமண பதிவுக்கு மற்ற இதர பதிவுகளுக்கு வருகின்றவர்களிடம் அதிகமான லஞ்சப் பணத்தை பெற்றுத் தருகின்றவர்களாக இந்த பத்திரம் எழுதும் எழுத்தார்களே இருக்கின்றார்கள் ஒட்டுமட்டத்தில் பத்திரம் எழுதும் ஆவணம்எழுதுபவர்கள் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருக்கக்கூடிய அதிகாரிகளும் எல்லாம் கூட்டுக் களவாணிகளே அலுவலர்களில
Rate this:
Cancel
Gajageswari - mumbai,இந்தியா
12-ஜூன்-202305:50:32 IST Report Abuse
Gajageswari பல்லடம் அலுவலகத்தை 4ஆக பிரிக்கலாம்
Rate this:
Cancel
Vaidyalingam Renganathan - Nagapattinam,இந்தியா
11-ஜூன்-202319:09:06 IST Report Abuse
Vaidyalingam Renganathan பத்திர பதிவு துறையில் லஞ்சத்தை கட்டுபடுத்த அரசும் , பத்திர பதிவை எளிமையாகவும் வெளிப்படையானதாகவும் மாற்ற வேண்டும். பத்திரப் பதிவு எழுத்தர்கள் இல்லாமலேயே நில உடமையாளர்களே படிவங்களை பூர்த்தி செய்து பத்திர பதிவு செய்யலாம் என்ற நிலைக்கு எளிமை படுத்த வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X