ஹிந்து சிறுமிக்கு கட்டாய திருமணம்; பெற்றோருடன் அனுப்ப கோர்ட் மறுப்பு
ஹிந்து சிறுமிக்கு கட்டாய திருமணம்; பெற்றோருடன் அனுப்ப கோர்ட் மறுப்பு

ஹிந்து சிறுமிக்கு கட்டாய திருமணம்; பெற்றோருடன் அனுப்ப கோர்ட் மறுப்பு

Added : ஜூன் 11, 2023 | கருத்துகள் (9) | |
Advertisement
கராச்சி: பாகிஸ்தானில், 14 வயதான ஹிந்து சிறுமியை கட்டாயப்படுத்தி, இஸ்லாம் மதத்துக்கு மாற்றி திருமணம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்காமல், அந்த பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைக்க மறுத்து, பாக்., நீதிமன்றம் உத்தரவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக வசிக்கின்றனர். இங்கு சிந்து மாகாணத்தில் வசிக்கும் ஹிந்து மதத்தைச்
 Forced marriage of Hindu girl; Court refusal to send with parents    ஹிந்து சிறுமிக்கு கட்டாய திருமணம்; பெற்றோருடன் அனுப்ப கோர்ட் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


கராச்சி: பாகிஸ்தானில், 14 வயதான ஹிந்து சிறுமியை கட்டாயப்படுத்தி, இஸ்லாம் மதத்துக்கு மாற்றி திருமணம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்காமல், அந்த பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைக்க மறுத்து, பாக்., நீதிமன்றம் உத்தரவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக வசிக்கின்றனர். இங்கு சிந்து மாகாணத்தில் வசிக்கும் ஹிந்து மதத்தைச் சேர்ந்த திலீப் குமார் என்பவரது மகள், சோஹானா சர்மா குமாரி, 14.

இந்த சிறுமி, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒருவரிடம், 'டியூஷன்' படித்தார்.

டியூஷன் சொல்லிக் கொடுக்கும் நபர், சமீபத்தில் அந்த சிறுமியின் வீட்டுக்கு, ஒரு கும்பலுடன் வந்து, அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றார். பெற்றோர் கெஞ்சி கேட்டும், சிறுமியை விடவில்லை.

இது குறித்து திலீப் குமார், போலீசில் புகார் அளித்தார். ஐந்து நாட்களுக்குப் பின், அந்த சிறுமியை போலீசார் மீட்டு, நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

அப்போது அந்த சிறுமி, டியூஷன் சொல்லிக் கொடுத்த நபர், தன்னை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று, இஸ்லாம் மதத்துக்கு மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை பெற்றோருடன் அனுப்பி வைக்கும்படியும் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து நீதிபதி, 'அந்த சிறுமி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இப்போதைக்கு இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது.

'பெற்றோருடன் அனுப்ப உத்தரவிட முடியாது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் வரை, அந்த சிறுமியை காப்பகத்தில் தங்கியிருக்க உத்தரவிடுகிறேன்' என்றார்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (9)

Sudarsan R -  ( Posted via: Dinamalar Android App )
11-ஜூன்-202316:08:34 IST Report Abuse
Sudarsan R Dont know why hindus,are in Pakistan and why they are not mass converted to Islam. Perhaps its a sadist pleasure to kidnap rape or marry Hindus, like eating cows and goats and camels
Rate this:
Cancel
11-ஜூன்-202315:17:02 IST Report Abuse
பேசும் தமிழன் எல்லோரும் டாஸ்மாக் மூலம் மட்டையாகி விட்டீர்களா ???
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
11-ஜூன்-202308:58:12 IST Report Abuse
Barakat Ali இத்தனை கொடுமைகள் நடந்தும், அங்கே வறுமை கோர தாண்டவம் ஆடும் நிலையிலும் பல ஹிந்துக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறி இந்தியா வர முயலுவதில்லை.... இந்நிலை எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X