பகுதி நேர ஆசிரியர்களுக்கு  மே மாதம் சம்பளம் 'கட்'
பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் 'கட்'

பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் 'கட்'

Updated : ஜூன் 11, 2023 | Added : ஜூன் 11, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை: 'மே மாதம் சம்பளம் வழங்கப்படாது' என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருப்பது, பகுதி நேர ஆசிரியர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், கணினி, உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், தோட்டக் கலை, கட்டடக் கலை போன்ற பாடப்பிரிவுகளில், 12,000 பகுதி நேர ஆசிரியர்கள், மாதம், 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்தில், 12 ஆண்டுகளாகப்
 Salary cut for part-time teachers in May   பகுதி நேர ஆசிரியர்களுக்கு  மே மாதம் சம்பளம் 'கட்'


சென்னை: 'மே மாதம் சம்பளம் வழங்கப்படாது' என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருப்பது, பகுதி நேர ஆசிரியர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், கணினி, உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், தோட்டக் கலை, கட்டடக் கலை போன்ற பாடப்பிரிவுகளில், 12,000 பகுதி நேர ஆசிரியர்கள், மாதம், 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்தில், 12 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகின்றனர்.


கடும் அதிர்ச்சி



அவர்களுக்கு பள்ளி நடக்கும் மாதங்களில் மட்டும் சம்பளம் வழங்கப்படும். பள்ளி விடுமுறையான மே மாதம், சம்பளம் வழங்கப்படுவதில்லை.

அவர்கள், தங்களுக்கு மே மாத சம்பளம் வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, நீண்ட காலமாக கோரி வருகின்றனர்.

கோரிக்கையை வலியுறுத்தி சமீபத்தில் போராட்டமும் நடத்தினர். அப்போது அவர்கள் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும் என, அமைச்சர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. எனவே, இந்த ஆண்டு மே மாதம் சம்பளம், தங்களுக்கு கிடைக்கும் என, பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்த்தனர்.


latest tamil news


ஆனால், மே மாதம் சம்பளம் இல்லை என, ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனரகம் அறிவித்துள்ளது. இது, பகுதி நேர ஆசிரியர்களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு, மே மாதம் சம்பளம் வழங்கப்படாததற்கு, அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


பணி நிரந்தரம்



இது தொடர்பாக பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்.

'ஒடிசா மாநிலத்தில், 57,000, ராஜஸ்தான் மாநிலத்தில், 1.10 லட்சம் தற்காலிகப் பணியாளர்கள் முறைப்படுத்தப்பட்டு நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்திலும் இதேபோல் முதல்வர் பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (2)

Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
11-ஜூன்-202313:12:09 IST Report Abuse
Ramesh Sargam சேலத்தில் கருணாநிதிக்கு சிலை வைத்திருக்கிறோம். மேலும் பல ஊர்களில் சிலை வைக்க காசு வேண்டாமா...? என்னமோ ஒரு மாதம் சம்பளம் இல்லை என்றால் இப்படி புலம்புகிறீர்களே...??
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
11-ஜூன்-202308:14:52 IST Report Abuse
Kasimani Baskaran அரசு வேலையில் கூட கொத்தடிமைகள் போல பலர் நடத்தப்படுவது மகா மட்டமான அணுகுமுறை. பொது மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஆவின் போன்ற அரசு நிறுவனங்களில் பலர் இரத்தம் உரிஞ்சிக்கொண்டு இருக்கிறார்கள். வீணாய்ப்போகும் நிதியை கட்டுப்படுத்தினாலேயே இவர்களுக்கு வேலை நிரந்தரம் மட்டுமல்லாது பலரது திறன்களை மேம்படுத்தலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X