சமரசம் செய்ய நெருக்கடி மல்யுத்த வீராங்கனை புகார்
சமரசம் செய்ய நெருக்கடி மல்யுத்த வீராங்கனை புகார்

சமரசம் செய்ய நெருக்கடி மல்யுத்த வீராங்கனை புகார்

Updated : ஜூன் 11, 2023 | Added : ஜூன் 11, 2023 | கருத்துகள் (11) | |
Advertisement
புதுடில்லி: ''இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் புகார்களை திரும்பப் பெற நெருக்கடி கொடுக்கப்படுகிறது,'' என, மல்யுத்த வீராங்கனை சாக் ஷி மாலிக் கூறிஉள்ளார்.இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக, ஒரு சிறுமி உட்பட ஏழு மல்யுத்த வீராங்கனையர் பாலியல் புகார் கூறியுள்ளனர். இது தொடர்பாக, அவர்கள் ஒரு
 Wrestler complains of crisis to compromise   சமரசம் செய்ய நெருக்கடி மல்யுத்த வீராங்கனை புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


புதுடில்லி: ''இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் புகார்களை திரும்பப் பெற நெருக்கடி கொடுக்கப்படுகிறது,'' என, மல்யுத்த வீராங்கனை சாக் ஷி மாலிக் கூறிஉள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக, ஒரு சிறுமி உட்பட ஏழு மல்யுத்த வீராங்கனையர் பாலியல் புகார் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக, அவர்கள் ஒரு மாதத்துக்கு மேலாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மல்யுத்த வீராங்கனை சாக் ஷி மாலிக் நேற்று கூறியதாவது:

பாலியல் புகார் கொடுத்த சிறுமிக்கு கடும் நெருக்கடி கொடுத்து, புகாரை திரும்பப் பெற வைத்துள்ளனர்.

இதுபோலவே, புகார் கூறியுள்ள மற்றவர்களுக்கும் சமரசம் செய்யும்படி கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில், பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

எம்.பி.,யாகவும் உள்ள அவர் தன் அதிகாரத்தை பயன்படுத்தி, புகார் கூறியவர்களையும், போராடி வரும் எங்களையும் மிரட்டி வருகிறார்.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குருடன் நடத்திய பேச்சின்படி, ௧௫ம் தேதி வரை காத்திருப்போம்.

அதன்பின், அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சர்வதேச போட்டிகளில் நடுவராக பணியாற்றும் ஜக்பீர் சிங் நேற்று அளித்த பேட்டியில், பிரிஜ் பூஷன் சிங் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்று குறிப்பிட்டார். இதையடுத்து, அவருடைய வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
11-ஜூன்-202313:18:59 IST Report Abuse
R.RAMACHANDRAN இந்த நாடு சுதந்திரம் பெற்றதே குற்றவாளிகளை காப்பதற்கும் நேர்மையானவர்களை ஒடுக்குவதற்காவே எனற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.
Rate this:
R Kay - Chennai,இந்தியா
11-ஜூன்-202315:44:51 IST Report Abuse
R Kayஉண்மையே ஒன்பது வருடங்களுக்கு முன்வரை அப்படித்தான் இருந்தது....
Rate this:
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
11-ஜூன்-202312:29:17 IST Report Abuse
Apposthalan samlin முசல் பிடிக்கிற மூஞ்சை பார் என்று சொல்லுவார்கள் அதே மாதிரி..
Rate this:
Cancel
11-ஜூன்-202311:11:33 IST Report Abuse
 இந்தியன் இது காலிஸ்தான் போன்ற டூல் கிட் திட்டங்களை நிறைவேற்ற வந்துள்ளது. விவசாயிகளை ஏமாற்றி பெரும்வியாபாரிகளின் கமிஷன் வாங்கி விவசாய கொள்முதல் நிலையங்களில் கொள்ளை அடிக்கும் கூட்டத்திற்கு போராட்டம் நடத்திய பஞ்சாப் மற்றும் அரியானா மாபியாசக்களின் ஆதரவு எப்படி இந்த மல்யுத்த ஹரியானா மாநில வீரர்களுக்குஉதவிகிடைக்கிறது. மோடியின் அரசு இவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்ததால் தான் இந்த போராட்டம் காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்தால் அடுத்த நாள் ஜெயிலுக்கு தான் செல்ல வேண்டும் என்பது இந்த மரமண்டைகளுக்கு தெரியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X