சனாதனம் பேச்சில் நிதானம் தேவை: எம்.பி.,க்களுக்கு ஸ்டாலின் அறிவுரை
சனாதனம் பேச்சில் நிதானம் தேவை: எம்.பி.,க்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

எக்ஸ்குளுசிவ் செய்தி

சனாதனம் பேச்சில் நிதானம் தேவை: எம்.பி.,க்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

Added : செப் 18, 2023 | கருத்துகள் (15) | |
Advertisement
பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடரில், சனாதனம் சர்ச்சை எழுப்பப்பட்டால், அதை கவனமாக கையாள வேண்டும் என, தி.மு.க., - எம்.பி.,க்களை முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.இதுகுறித்து, தி.மு.க., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசியது, தேசிய அளவில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் தான், பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடர்
Parliament: Stalin advises MPs to be calm in Sanatana speech  சனாதனம் பேச்சில் நிதானம் தேவை: எம்.பி.,க்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடரில், சனாதனம் சர்ச்சை எழுப்பப்பட்டால், அதை கவனமாக கையாள வேண்டும் என, தி.மு.க., - எம்.பி.,க்களை முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, தி.மு.க., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசியது, தேசிய அளவில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் தான், பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டு, இன்று துவங்குகிறது. அதில்,

எப்படியும் உதயநிதி மற்றும் சனாதன பேச்சை, பா.ஜ., தரப்பு கிளப்பும் என்று ஸ்டாலின்

எதிர்பார்க்கிறார்.


பா.ஜ., பேச்சுக்கு, உரிய முறையில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என, ஸ்டாலின்

விரும்புகிறாரே தவிர, மூர்க்கமாக அவர்களோடு மோத விரும்பவில்லை.'சனாதனம் குறித்து உதயநிதி பேசியது, ஹிந்துக்களை அழிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் அல்ல; ஹிந்துக்கள் மத்தியில் இருக்கும் ஜாதி ஏற்றத்தாழ்வு மற்றும் வேறுபாடுகளை களைந்து, புதிய சமூகத்தை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான், உதயநிதி பேசினார் என பார்லிமென்டில், தி.மு.க., சார்பில் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும்' என, தி.மு.க., - எம்.பி.,க்களிடம்

ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.


மொத்தத்தில், சனாதன ஒழிப்பு விவகாரத்தை மேற்கொண்டு வளர்த்துக் கொண்டே போக, தி.மு.க., விரும்பவில்லை. அது தொடர்பான விவாதமோ, கருத்துக்களோ பொது வெளியில் வைக்கப்படும் போது, அதை தி.மு.க.,வினர் கவனமாக எதிர்கொண்டு, அதற்கு உரிய பதிலை சமாதானமாக வெளிப்படுத்த வேண்டும் என்பது தான், ஸ்டாலினின் நிலைப்பாடு.


இதைத்தான், பார்லிமென்டில் தி.மு.க., - எம்.பி.,க்கள் எதிரொலிக்க வேண்டும் என்றும்

ஸ்டாலின் விரும்புகிறார். அதாவது, குதர்க்கமாக பேச வேண்டாம் என, எம்.பி.,க்களுக்கு,

'செக்' வைத்துள்ளார். ஆனால், பார்லிமென்டில் சூழல் எப்படி அமையும் என்பதை

இப்போதைக்கு கணித்துக் கூறமுடியாது.இவ்வாறு அவர் கூறினார்.


- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (15)

R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
18-செப்-202322:22:10 IST Report Abuse
R.MURALIKRISHNAN இன்னுமாப்பா இவங்களை இந்த நாடு நம்புது.
Rate this:
Cancel
18-செப்-202317:30:20 IST Report Abuse
theruvasagan பேசக்கூடாது என்று சொன்னால் மேலும் மேலும் பேசுவேன் என்று சொன்ன வாய்க்கு பூட்டு போட்டாச்சா இல்லையா.
Rate this:
Cancel
P.Sekaran - விருத்தாசலம்,இந்தியா
18-செப்-202317:11:53 IST Report Abuse
P.Sekaran இன்றைய முதல்வர் சனாதன முறைப்படி ஆட்சி செய்கிறாறா. ராஜீவ் காந்தியை கொன்றவர்களுக்கு மாலை போட்டு ஆர தழுவுகிரார். கள்ள சாராயம் குடித்து உயிர் இறந்தவர்களுக்கு பத்து லட்சம் கொடுக்கிறார் அதே சமயம் பட்டாசு ஆலையில் வேலை செய்பவர்கள் தீவிபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு தரமாட்டேன் என்கிறார் கைதியாக இருக்கும் அமைச்ச்ருக்கு மாதம் சம்பளம் போட்டு கொடுக்கிறார் உயர்நீதிமன்றம் சொல்லிய பிறகும் எந்த நடவடிக்கையும் செய்யாமல் இருக்கும் இவர்கள் சனாதன விரோதிகள்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X