எதிர்க்கட்சிகளை மதிக்க மறந்த பாஜ., : கார்கே குற்றச்சாட்டு
எதிர்க்கட்சிகளை மதிக்க மறந்த பாஜ., : கார்கே குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகளை மதிக்க மறந்த பாஜ., : கார்கே குற்றச்சாட்டு

Added : செப் 18, 2023 | கருத்துகள் (35) | |
Advertisement
புதுடில்லி: நேரு எதிர்கட்சிகளின் பேச்சைக் கேட்பார். ஆனால், பிரதமர் மோடிக்கு அதற்கு நேரமில்லை. எதிர்க்கட்சிகளை மதிப்பதில்லை என காங்கிரஸ் தலைவர் கார்கே ராஜ்யசபாவில் குற்றம் சாட்டி உள்ளார்.பார்லிமென்டின் ஐந்து நாள் சிறப்பு கூட்டத்தொடர் இன்று( செப்., 18ம் தேதி) துவங்கியது. பார்லிமென்டின் 75 ஆண்டு கால பயணம் குறித்து, முதல் நாளில் விவாதம் நடந்தது. இது தொடர்பாக ராஜ்யசபாவில்
Parliament: BJP forgot to respect opposition parties: Congress Mallikarjuna Kharge accuses  எதிர்க்கட்சிகளை மதிக்க மறந்த பாஜ., : கார்கே குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: நேரு எதிர்கட்சிகளின் பேச்சைக் கேட்பார். ஆனால், பிரதமர் மோடிக்கு அதற்கு நேரமில்லை. எதிர்க்கட்சிகளை மதிப்பதில்லை என காங்கிரஸ் தலைவர் கார்கே ராஜ்யசபாவில் குற்றம் சாட்டி உள்ளார்.


பார்லிமென்டின் ஐந்து நாள் சிறப்பு கூட்டத்தொடர் இன்று( செப்., 18ம் தேதி) துவங்கியது. பார்லிமென்டின் 75 ஆண்டு கால பயணம் குறித்து, முதல் நாளில் விவாதம் நடந்தது. இது தொடர்பாக ராஜ்யசபாவில் கார்கே பேசியதாவது: நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். வேலை வாய்ப்புகளை வழங்க முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.


நாட்டின் பெயரை மாற்றுவதால் ஒன்றும் ஆகாது. நீங்கள் மாற்ற விரும்பினால், இப்போது உள்ள நிலைமையை மாற்ற வேண்டும். இப்படி பெயரை மாற்றினால் என்ன நடக்கும்?. கொடுக்க வேண்டும் என்றால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுங்கள்.


உங்களால் எதுவும் செய்ய முடியாவிட்டால், உங்கள் நாற்காலியை விட்டு விடுங்கள். நீங்கள் ஒருவரையொருவர் பயமுறுத்தினால் என்ன நடக்கும்?. உங்கள் ஆட்சியில் பெருமை கொள்கிறீர்கள். மக்களை கொடுமைப்படுத்துவதால் என்ன நடக்கும்?. இவ்வாறு பல்வேறு கேள்விகளை கார்கே எழுப்பினார்.



குற்றச்சாட்டு

மேலும், அவர் பேசியதாவது: நேரு எதிர்கட்சிகளின் பேச்சைக் கேட்பார். ஆனால், பிரதமர் மோடிக்கு அதற்கு நேரமில்லை. பிரதமர் மோடி பார்லிமென்டிற்குள் நுழைந்ததும், எதிர்க்கட்சி எம்.பிக்கள் அவையை விட்டு வெளியேறினர். அதற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்தார் ஏன்?.


இங்கிருந்து (பழைய பார்லி., கட்டடம்) அங்கு (புதிய பார்லி., கட்டடம்) சென்றால் என்ன மாறும். நீங்கள் உங்கள் (பாஜ.,) அரசியல் செய்யும் முறையை மாற்றுங்கள். பல தியாகங்கள் மற்றும் சிரமங்களுக்குப் பிறகு அரசியலமைப்பு உருவானது. மணிப்பூர் பற்றி எரிகிறது. இதுவரை அங்கு ஏன் பிரதமர் மோடி செல்லவில்லை. இவ்வாறு கார்கே பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (35)

19-செப்-202308:17:49 IST Report Abuse
அப்புசாமி இது போல்ட்டுகளுக்கான காலம். இளைஞர்களுக்கு 2047 ல வாய்ப்பு குடுப்போம்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-செப்-202303:41:56 IST Report Abuse
J.V. Iyer மதிக்கக்கூடாத அளவுக்கு கேவலமாக தரம் தாழ்ந்துவிட்டது இந்த இந்தி கூட்டணி எதிர்க்கட்சிகள்.
Rate this:
Cancel
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
18-செப்-202322:47:07 IST Report Abuse
தாமரை மலர்கிறது திருடர்களை இந்தளவிற்கு மரியாதை கொடுத்ததே அதிகம் தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X