ராமநாதபுரத்தில் சீமைக் கருவேலமரங்களை அகற்றி ஊருணியை பசுமையாக்கிய எஸ்.எஸ்.ஐ.,: தன்னலமற்ற சேவையால் தலை நிமிர்ந்தவர்
ராமநாதபுரத்தில் சீமைக் கருவேலமரங்களை அகற்றி ஊருணியை பசுமையாக்கிய எஸ்.எஸ்.ஐ.,: தன்னலமற்ற சேவையால் தலை நிமிர்ந்தவர்

ராமநாதபுரத்தில் சீமைக் கருவேலமரங்களை அகற்றி ஊருணியை பசுமையாக்கிய எஸ்.எஸ்.ஐ.,: தன்னலமற்ற சேவையால் தலை நிமிர்ந்தவர்

Updated : அக் 03, 2023 | Added : அக் 02, 2023 | கருத்துகள் (14) | |
Advertisement
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வறண்ட பகுதியில் ஊருணியில் இருந்த சீமைக்கருவேல மரங்களை தனி நபராக அகற்றி அங்கு 800க்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து பசுமை வனச்சோலையாக மாற்றியுள்ளார் எஸ்.எஸ்.ஐ., சுபாஷ் சீனிவாசன்.ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறண்ட பகுதி என்ற எண்ணம் தான் அனைவரிடமும் இருக்கும். ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சுபாஷ் சீனிவாசன். பொருளாதார குற்றப்பிரிவில்
 SSI Subhash Srinivasan, who removed sem oak trees in Ramanathapuram and made Oruni green, stands tall for his selfless service.  ராமநாதபுரத்தில் சீமைக் கருவேலமரங்களை அகற்றி ஊருணியை பசுமையாக்கிய எஸ்.எஸ்.ஐ.,: தன்னலமற்ற சேவையால் தலை நிமிர்ந்தவர்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வறண்ட பகுதியில் ஊருணியில் இருந்த சீமைக்கருவேல மரங்களை தனி நபராக அகற்றி அங்கு 800க்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து பசுமை வனச்சோலையாக மாற்றியுள்ளார் எஸ்.எஸ்.ஐ., சுபாஷ் சீனிவாசன்.

ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறண்ட பகுதி என்ற எண்ணம் தான் அனைவரிடமும் இருக்கும். ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சுபாஷ் சீனிவாசன். பொருளாதார குற்றப்பிரிவில் எஸ்.எஸ்.ஐ.,யாக உள்ளார். தொடர்ந்து பொது நல சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். மரங்களில் விளம்பர பலகைகளுக்காக அடிக்கப்படும் ஆணிகளை அகற்றி முழுமையாக மரங்கள் வாழ வழி செய்துள்ளார்.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பட்டணம்காத்தான் ஊராட்சியின் சேதுபதி ஊருணி சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து புதராக காணப்பட்டது. 2019 ல் சுபாஷ் சீனிவாசன் தனிப்பட்ட மனிதராக களம் இறங்கினார். தினமும் அதிகாலை 4:00 முதல் 6:00 மணி வரையிலும் இரவு 7:00 முதல் 9:00 மணி வரையிலும் சீமைக்கருவேல மரங்களை ஊருணியிலிருந்து அப்புறப்படுத்தினார்.


பின்னர் அப்பகுதியில் வேலிகள் அமைத்து ஊருணியின் கரைகளில் பலன் தரும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார். சீமைக்கருவேல முள் மரங்கள் அடர்ந்த பகுதி தற்போது பசுமை சோலையாக மாறியுள்ளது. இதில், புங்கை, மா, பலா, ஆல், அத்தி, வேம்பு, அரசு, கொடுக்காப்புளி, தென்னை, ஈச்சை, வாகை, ஆவி, நீர்மருது, வாகை என பல்வேறு மரங்களை வளர்த்துள்ளார். ஊருணி அருகே நர்சரி பண்ணையும் அமைத்துள்ளார்.

சுபாஷ் சீனிவாசன் தெரிவித்ததாவது: காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் நமக்கில்லாவிட்டாலும் நமது சந்ததிகள் இயற்கை அழிவுகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும். இதைவலியுறுத்தி தொடர்ந்து மரம் வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். மக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கவுள்ளேன். ஆயிரம் பனை விதைகள் சேகரித்துள்ளேன். இவற்றை ராமேஸ்வரத்தில் உள்ள விவேகானந்த பவுன்டேஷன் மூலம் பிரம்ம தீர்த்த குளத்தின் கரைகளில் நடவு செய்யவுள்ளனர் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

MEMANGALAM ILA SENTHIL - BURAIDHA,சவுதி அரேபியா
03-அக்-202313:58:55 IST Report Abuse
MEMANGALAM ILA SENTHIL எனது கிராமத்திற்கு அருகே வரவணியில் பிறந்த காவல் துறையில் சிறப்பான தமிழக காவலர் விருதை பெற்ற பிறகும் இன்னும் தமிழக அரசு இவருக்கு பதவி உயர்வு அளித்து அண்ணனை இன்னும் மக்கள் சேவை ஆற்ற வழி வகை செய்ய வேண்டூம்... வாழ்த்துக்கள் அண்ணன் சீனி ......நன்றி மறவா வெளி நாடு வாழ் இளைஞர்கள் .......
Rate this:
Cancel
GOPAL MURALI - chidambaram,இந்தியா
03-அக்-202309:54:24 IST Report Abuse
GOPAL MURALI சுபாஷ் ஸ்ரீனிவாசன் சபாஷ், வாழ்க வளமுடன் நலமுடன் . என்றும் உங்கள் பனி தொடரட்டும் . வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
DARMHAR/ D.M.Reddy - Los Angeles,யூ.எஸ்.ஏ
03-அக்-202309:03:28 IST Report Abuse
DARMHAR/ D.M.Reddy இனியாவது அரசு விழித்துக்கொண்டு இவரது பொது தொண்டினை பாராட்டி வாழ்த்த வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X