ரூ. 7 ஆயிரம் கோடி யில் அடிப்படை மேம்பாடு: முதல்வர் ஜெ., ஒதுக்கீடு செய்து அறிவித்தார்

Added : ஜன 16, 2012 | கருத்துகள் (26) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த ரூ. 6 ஆயிரத்து 654 கோடி நிதியில் செய்யப்படுவதாக முதல்வர் ஜெ., இன்று அறிவித்துள்ளார். இதில் சென்னை குடிநீர் மேம்படுத்த ரூ. 41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள இந்த அரசு நகர்ப்புற கூட்டமைப்பு மேம்படுத்துவதில் முனைப்புடன்
ரூ. 7 ஆயிரம் கோடி யில் அடிப்படை மேம்பாடு: முதல்வர் ஜெ., ஒதுக்கீடு செய்து அறிவித்தார்

சென்னை: தமிழகத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த ரூ. 6 ஆயிரத்து 654 கோடி நிதியில் செய்யப்படுவதாக முதல்வர் ஜெ., இன்று அறிவித்துள்ளார். இதில் சென்னை குடிநீர் மேம்படுத்த ரூ. 41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


இது குறித்து முதல்வர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள இந்த அரசு நகர்ப்புற கூட்டமைப்பு மேம்படுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டம் என உருவாக்கி இதன் மூலம் மாநிலம் முழுவதும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க ரூ. 6 ஆயிரத்து 654 கோடி ஒதுக்கப்படுகிறது. வரும் 2030 க்குள் மக்கள் தொகை அதிகரிக்கும் பட்சத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது அவசியமாகிறது. இந்த திட்டத்தின்படி சுகாதாரம் பேணுதல், குடிநீர், சாலைகள் செப்பனிடுதல், கழிவுநீர் அகற்றம், திடக்கழிவு மேலாண்மை, பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்படும். மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்கு 5 ஆயிரத்து 890 கோடியும், பேரூராட்சி பகுதிகளுக்கு 763 .91 கோடியும் ஒதுக்கப்படும். சென்னையில் குடிநீர் மேம்பாட்டுக்கு செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து 2 வது இணை குழாய் அமைக்க ரூ. 41 கோடியே 35 லட்சமும் ஒதுக்கப்படுகிறது.


முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் ரூ. 757 கோடியே 28 லட்சம் செலவில் பணிகள் துவக்கப்படும். மாநகர் மற்றும் நகராட்சி பகுதிகளுக்கு ரூ. 506. 48 கோடியில், கழிவு நீர் வெளியேற்றம் ( 30 கோடியே 50 லட்சம்), குடிநீர் (58 கோடியே 80 லட்சம்), சாலைகள் சீரமைப்பு ( 145 கோடியே 11 லட்சம்) , மழைநீர் சேகரிப்பு ( 88 கோடியே 96 லட்சம்), சுற்றுசூழலை பாதுகாக்கும் திடக்கழிவு மேலாண்மை ( 124 கோடியே 54 லட்சம்), தெருவிளக்கு ( 58 கோடியே 57 லட்சம்) .கிராமப்புறம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 250 கோடியே 80 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (26)

Raj - Chennai,இந்தியா
18-ஜன-201213:32:11 IST Report Abuse
Raj போடுங்க ஆட்டைய
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
18-ஜன-201206:43:01 IST Report Abuse
Matt P கோடி கோடியா பணத்தை வாரி இறைச்சு மக்களுடைய வசதியை பெருகிகிட்டா. ...மக்களுக்கு அரசியலிலும் தங்களை போன்ற அரசியல்வாதிகளிடமும் ஒரு நம்பிக்கை வரும். ...பணம் நல்ல வழியில் செலவழிக்கபடுகிறதா...என்பதை அறிந்து கணக்கு வழக்குகளை சரியா வைச்சுகிட்டா....அரசாங்கத்துக்கும பண பற்றாக்குறை வராது ..
Rate this:
Cancel
ib212089 - France  ( Posted via: Dinamalar Android App )
18-ஜன-201201:01:33 IST Report Abuse
ib212089 இத்தி்ட்ங்கள் வெரும் அறிவிப்போடு இருந்து விடாமல் மக்கள் தேவைக்கேற்ப முக்கித்துவம் கொடுத்து 50% ஆவது மக்கள் பயணடைந்தால் ஆட்சி செய்பவர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X