மறைமலைநகர் : கல்லூரி மாணவியின் மொபைல் போன் மற்றும் பணத்தை திருடிச்
சென்ற, வாலிபரை போலீசார் கைது செய்தனர். மயிலாப்பூரை சேர்ந்தவர் சூசன்
கொரியன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மகள் நைனா, 20. இவர்,
காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில், ஏரோ நாடிக்கல்
முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 20ம் தேதி காலை 10 மணிக்கு,
பல்கலைக் கழகத்தில் தேர்வு எழுதுவதற்கு சென்றார். தேர்வு அறை முகப்பில்,
தனது மொபைல்போன் மற்றும் 500 ரூபாயை பையில் வைத்துவிட்டு சென்றார். தேர்வு
முடிந்து வெளியே வந்து பார்த்த போது, பையில் இருந்த மொபைல் போன் மற்றும்
500 ரூபாய் திருடு போயிருந்தது. இது குறித்து நைனா மறைமலைநகர் போலீசில்
புகார் கொடுத்தார். விசாரணையில், பல்கலைக்கழகத்தில் கட்டுமானப் பணி
செய்துவரும் குமரன், 18, திருடியது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது
செய்தனர். அவரிடமிருந்து திருடுபோன மொபைல் போன் மற்றும் பணம் பறிமுதல்
செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE