டோக்கியோ:எல்லை கடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான உண்மையான அச்சுறுத்தலை ஆப்கானிஸ்தான் தான் சந்தித்து வருகிறது என வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்த மாநாடு ஜப்பானின் டேக்கியோ நகரில் நடந்து வருகிறது.இதில் 80 நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கலந்து கொண்டு பேசியதாவது:
இந்தியாவின் நட்பு நாடு ஆப்கானிஸ்தான் , அந்நாட்டின் மறு கட்டமைப்புக்கு சர்வதேச சமூகம் உதவி செய்து வருகிறது. மேலும் எல்லை கடந்த பயங்கரவாதத்தின் உண்மையான அச்சுறுத்தலை ஆப்கானிஸ்தான் சந்தித்து வருகிறது. இதனை தடுக்க முயற்சி வேண்டும். 2014-ம் ஆண்டிற்குள் சர்வதேச படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற உள்ளன. அதன்பின்னர் சர்வதேச நாடுகள் உதவிட வேண்டும் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE