கூடலூர்:கக்கனல்லா - ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் பழுதடைந்து பாதுகாப்பு
தடுப்பு இன்றி காணப்படும் பாலங்களை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலை துறையினர்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீலகிரியின் எல்லையான கக்கனல்லா முதல் ஊட்டி
வரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்க சாலையோரங்களில்
அமைக்கப்பட்டுள்ள பல தடுப்புச் சுவர்கள் தற்போது பலமிழந்து உடைந்து
காணப்படுகிறது. அதனை இதுவரை சீரமைக்க வில்லை.
இதே போன்று சாலை நடுவேயுள்ள
பாலங்கள் பலவும் பழுதடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளன. பல பாலங்களின் இரு
புறமும் தடுப்பு இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. நேற்று
முன்தினம் காலை முதுமலை கார்குடி அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 25
பேர் காயமடைந்தனர்."இந்த பாலத்தில் ஓரத்தில் பாதுகாப்பு தடுப்பு இல்லாததும்
விபத்துக்கு முக்கிய காரணம்,' என வாகன டிரைவர்கள் புகார் தெரிவித்தனர்.இது
போன்ற விபத்துகள் மீண்டும் நடைபெறுவதை தடுக்க, பழுதடைந்த பாலங்களை
சீரமைத்து அதன் இருபுறமும் பாதுகாப்பு தடுப்பு அமைக்க, தேசிய நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை
எடுக்க வேண்டும்; இரவு நேரத்தில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE