சென்னை :
அண்ணா சாலை தலைமை தபால் நிலையத்தில், வரும் 15ம் தேதி குறைதீர்வு கூட்டம்
நடக்கிறது. தபால்துறை சேவைகள் தொடர்பான குறைகளை இதில் தெரிவிக்கலாம். பதிவு
தபால், மணியார்டர், பார்சல்கள், சேமிப்பு கணக்குகள் உள்ளிட்ட புகார்களை,
அனுப்புனர் மற்றும் பெறுநரின் முழு முகவரி, பதிவு தபால் அனுப்பிய நாள்
மற்றும் தபால் நிலையத்தின் முகவரி உள்ளிட்ட முழு விவரங்களோடு,"
கார்த்திகேயன், உதவி இயக்குனர் (மக்கள் குறைதீர்ப்பு) தலைமை தபால் அலுவலர்
அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை -02' என்ற முகவரிக்கு அனுப்ப
வேண்டும்.மின்னஞ்சல் மூலம் மனுக்களை அனுப்ப விரும்புவோர், "டாக் அதாலத்'
என்று தலைப்பிட்டு,
"ச்ஞீணீஞ்tண@ஞ்ட்ச்டிடூ.ஞிணிட்' என்ற முகவரிக்கு
அனுப்பலாம். மனுக்களை, வரும் 12ம் தேதி மாலைக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
வரும் 15ம் தேதி மாலை, 3 மணிக்கு, குறைதீர்வு கூட்டம் நடைபெறும் என்று
தமிழக தபால் துறை தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE