விதண்டாவாதத்திற்கு என்ன பதில் கூறுவது? : கருணாநிதி
விதண்டாவாதத்திற்கு என்ன பதில் கூறுவது? : கருணாநிதி

விதண்டாவாதத்திற்கு என்ன பதில் கூறுவது? : கருணாநிதி

Updated : டிச 31, 2012 | Added : டிச 30, 2012 | கருத்துகள் (103) | |
Advertisement
சென்னை:"காவிரி நடுவர் மன்றத்தின், இறுதித்தீர்ப்பு விவகாரத்தில், விதண்டாவாதத்திற்கு என்ன பதில் சொல்வது' என, முதல்வர் ஜெயலலிதாவிற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி பதில் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: "தி.மு.க., எம்.பி., க்கள், பிரதமரைச் சந்தித்து, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை உடனடியாக வெளியிட வேண்டும் என, உண்மையிலேயே வலியுறுத்தினார்களா அல்லது கேட்பது போல,
what to say in reply? : Karunanidhi விதண்டாவாதத்திற்கு என்ன பதில் கூறுவது? : கருணாநிதி

சென்னை:"காவிரி நடுவர் மன்றத்தின், இறுதித்தீர்ப்பு விவகாரத்தில், விதண்டாவாதத்திற்கு என்ன பதில் சொல்வது' என, முதல்வர் ஜெயலலிதாவிற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி பதில் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: "தி.மு.க., எம்.பி., க்கள், பிரதமரைச் சந்தித்து, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை உடனடியாக வெளியிட வேண்டும் என, உண்மையிலேயே வலியுறுத்தினார்களா அல்லது கேட்பது போல, ஒரு கபட நாடகமாடி, முட்டுக்கட்டை போட்டனரா என்பது, புரியாத புதிராக இருக்கிறது' என, முதல்வர் ஜெயலலிதா சாடியிருக்கிறார்.இது தி.மு.க., எம்.பி.,க்கள் மாத்திரமல்ல, பிரதமர் அலுவலகத்திற்கே களங்கத்தை ஏற்படுத்துவது போல உள்ளது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என, பிரதமரிடம் தி.மு.க., எம்.பி., க்கள் கேட்டு, உடனடியாக அது பற்றி கவனிப்பதாக, உறுதி அளித்திருக்கிறார்.

ஆனால், ஜெயலலிதா அவருக்கே உரிய பாணியில், இதைப் பற்றியும், தனது அறிக்கையில் தவறாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். வாதத்திற்கு பதில் சொல்லலாம்; விதண்டவாதத்திற்கு என்ன பதில் சொல்வது?இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (103)

Tamilselvan - Chennai,இந்தியா
31-டிச-201218:31:58 IST Report Abuse
Tamilselvan விதண்டாவாதத்தின் மொத்த உருவமே உங்களுக்கு நாட்டு மக்களை பற்றி என்றாவது கவலை இருந்ததா? கோடி கோடி எப்படி கொள்ளை அடிக்கலாம், என்ன பதவி அடையலாம், மாட்டி கொண்ட குடும்ப உறுபினர்களை எப்படி வெளியில் கொண்டு வரலாம் என்ற நினபுகளை தவிர வேறு ஏதாவது இருந்தது உண்டா ??? போங்க தாத்தா உங்களுக்கு தமாஸ் கொஞ்சம் அதிகம்
Rate this:
Cancel
Palani Durai - chennai,இந்தியா
31-டிச-201218:20:03 IST Report Abuse
Palani Durai இதில் என்ன விதண்டாவாதம் இருக்கிறது,ஆதாரம் இருந்தால் கட்டவேண்டியதுதானே, எழுத்து பூர்வ கோரிக்கை கொடுப்பதற்கு முன் பிரதமர் மணி அடித்து விட்டாரா, தி முக எம்பிகளுக்குகே வெளிச்சம்.
Rate this:
Cancel
vasan - doha,கத்தார்
31-டிச-201217:42:32 IST Report Abuse
vasan அதானே பார்த்தேன்....இவர் ஆட்சியில் வெங்காயம் விலை ஏறி விட்டதே என்று கேட்டால் போய் பெரியாரிடம் கேளுங்கள் என்று ஆணவமான பதில் எங்களுக்கு மறக்கவில்லை தாத்தா...................ஒரு கேள்விக்கு கூட சரியான பதிலை கொடுக்க முடியாத உங்களால் விதண்டாவததை பற்றி எப்படி பேச முடிகிறது .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X