சென்னை : தமிழக அமைச்சர்களாக இருந்த கோகுல இந்திரா, விஜய், சிவபதி ஆகியோரின் பதவி நேற்று பறிக்கப்பட்டது. மாறாக அவர்களுக்கு பதில் புதிய அமைச்சர்களாக வீரமணி, பூனாட்சி மற்றும் வைகை செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. கவர்னர் ரோசய்யா பதவி பிரமாணம் செய்து வைக்க அமைச்சர்களாக மூவரும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் நேற்று மாற்றம் செய்யப்பட்ட கோகுல இந்திரா, விஜய், சிவபதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE