ஆண்டிபட்டி : வைகை அணை மற்றும் பூங்கா பகுதியில், போலீசார் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை மேற்கொண்டனர். பிப்ரவரி 21ல் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் நக்சல்கள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பில் 20 பேர் பலியாகினர். நக்சல்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக,தேனி மாவட்டம் வைகை அணையில் பாதுகாப்பு கருதி, மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சிறப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
வைகை அணை மற்றும் பூங்கா பகுதிகள், நுண்புனல் மின் நிலையம் உட்பட பல இடங்களில், மெட்டல் டிடக்டர் உதவியுடன் வெடிகுண்டு பதுக்கப்பட்டுள்ளதா, என்பது குறித்து சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து சோத்துப்பாறை, மஞ்சளாறு அணை உட்பட தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE