தமிழகத்தை தாண்டாத ஈழ பிரச்னை: காரணம் யார்?
தமிழகத்தை தாண்டாத ஈழ பிரச்னை: காரணம் யார்?

தமிழகத்தை தாண்டாத ஈழ பிரச்னை: காரணம் யார்?

Updated : மார் 25, 2013 | Added : மார் 23, 2013 | கருத்துகள் (90) | |
Advertisement
ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் மத்திய ஆளும் கூட்டணியில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. ஆனால், தமிழகத்தைத் தாண்டி, நாட்டின் பிற பகுதிகளுக்கு ஈழப் பிரச்னை செல்லவில்லை. டில்லியில், லோக்சபா சபாநாயகர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், இது வெளிச்சத்துக்கு வந்தது.பார்லிமென்டில், ஈழம் தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, லோக்சபா சபாநாயகர்
Why Eelam problem did not cross TN boundary?தமிழகத்தை தாண்டாத ஈழ பிரச்னை: காரணம் யார்?

ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் மத்திய ஆளும் கூட்டணியில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. ஆனால், தமிழகத்தைத் தாண்டி, நாட்டின் பிற பகுதிகளுக்கு ஈழப் பிரச்னை செல்லவில்லை. டில்லியில், லோக்சபா சபாநாயகர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், இது வெளிச்சத்துக்கு வந்தது.
பார்லிமென்டில், ஈழம் தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, லோக்சபா சபாநாயகர் மீராகுமார், கூட்டினார். கூட்டத்தில், ஈழப் பிரச்னைக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியதே தவிர, ஆதரவு கிடைக்கவில்லை. பா.ஜ., - சமாஜ்வாதி, - பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள், "தனியொரு நாட்டிற்கு எதிராக, பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது. இலங்கையில், நடந்தது இனப் படுகொலை எனக் கூற முடியாது' என, தெரிவித்தன. சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள், "காங்கிரசுக்கும், - தி.மு.க.,வுக்கும் இடையிலான பிரச்னையை, அவர்கள் இருவரும் பேசித் தீர்க்காமல், அனைத்துக் கட்சி கூட்டத்தை எதற்குக் கூட்டினீர்கள்' என, பெரும் கோபத்தை வெளிப்படுத்தியது. இந்நிலையில், ஈழப் பிரச்னையை, தமிழகத்தைத் தாண்டி, தேசிய பிரச்னையாக கொண்டு செல்ல முடியாததற்கு யார் காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, ஈழப் பிரச்னையில் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம்; பல போராட்டங்களை நடத்தியுள்ளோம் என, தன் முதுகை தானே தட்டிக் கொள்ளும் தி.மு.க., தமிழகத்தைத் தாண்டி இப்பிரச்னை செல்வதற்கு என்ன செய்தது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். லோக்சபாவில், கூட்டணிக் கட்சிகளைக் கொண்டு ஈழத் தீர்மானத்தை நிறைவேற்றினாலும், ராஜ்யசபாவில் போதிய ஆதரவில்லை. தீர்மானம் தோற்றுவிடும் என, கூறிவிட்டு விலகி நின்றதற்கான காரணத்தையும், காங்கிரஸ் கூற வேண்டும் என, தமிழக மக்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்துள்ளன. நாட்டில் உள்ள பிற கட்சிகளிடம் ஈழப் பிரச்னையை எடுத்துச் சென்று ஆதரவைத் திரட்டாதது, தேசிய அளவில், கருத்தொற்றுமையை உருவாக்காதது ஆகியவற்றுக்கு, தமிழக கட்சிகளே பொறுப்பாளிகள் என்றும், மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு உள்ளது. இதற்கிடையே, ஈழப் பிரச்னை குறித்து பொதுக் கருத்தை ஏற்படுத்தும் வகையில், தமிழ் எழுத்தாளர்களோ, ஆர்வலர்களோ தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக, ஆங்கிலம், இந்தி போன்ற பொது மொழிகளில் பிரசாரம் செய்யவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.
- நமது சிறப்பு நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (90)

சத்தி - Bangalore,இந்தியா
24-மார்-201311:59:12 IST Report Abuse
சத்தி தமிழ் உணர்வுக்கு அங்கனெ எதிரான நிலை, அங்க போயி இலங்கை தமிழர் பிரச்னைக்கு ஆதரவு தானா கெடைக்குமா. பாலிவுட் பெரிய மெகா ஸ்டார புடிங்க, அவுங்கள வெச்சு கான்வாஸ் பண்ணுங்க. மற்றபடி இறந்த ஒரு சிறுவனின் போட்டவ வெச்சுகிட்டு, போஸ்டர் அடிச்சு ஓட்டும் கீழ்தரமான அரசியல் செய்பவரை ஆட்சியை விட்டே தூக்கி எறியுங்கள்.
Rate this:
Cancel
Thanjaithamilan - QATAR,இந்தியா
24-மார்-201311:52:39 IST Report Abuse
Thanjaithamilan இது... திராவிடம் என்று கூறி கொள்ளும் கட்சிகள்மட்டுமே கூறவேண்டும், இவ்வளவு நாட்களாக என்ன கிழித்து கொண்டு இருந்தீர்கள் என்று மத்தியில் கேட்கத்தான் செய்வார்கள். அன்று நமது துடிப்பான பிரதமர் என்ற இளைஞரை கொன்ற விடுதலை புலிகள் அந்த செயலுக்கு முன்பே அவர்களின் நியாத்தை காந்தியடிகளின் அர போராட்டத்தை கையில் எடுக்காமல், ஆயுத போராட்டத்தை கையில் எடுத்ததனால் மட்டுமே லட்ச கணக்கான அப்பாவி பொது மக்கள் சாவுக்கு காரணம். 78 சதவீதம் சிங்களர்களும், 28 சதவீதம் உள்ள தமிழர்களும் சண்டை இட்டு, இன்று - அன்று தாங்கள் செய்த தவறுக்கு இந்தியாவின் மூலன் தங்கள் தவறை நியாயப்படுத்த வேண்டும் என்று தமிழன் மட்டும் நினைத்தை எங்களால் முடியாது என்று மத்தியில் "கை" காட்டி விட்டார்கள். 30 வருடங்களுக்கான போராட்ட போரின் விளைவுகளை வரும் எம்பி எலேக்சனுக்காக ஓட்டாக மாற்ற மட்டுமே, இன்று அரசியல் கட்சிகள் போராட்டம் என்ற ஒன்றை தூக்கி கொண்டுள்ளது. பல நாட்களாக நிச்சயம் இந்தியா இந்த விசயத்தில் நேரடியாக இலங்கை ஏய் கட்டாய படுத்தி தமிழர்களுக்காக செய் என்று சொல்ல முடியாது என்று நான் கூறி வந்தேன். நானும் ஒரு தமிழன்தான். இன்றுள்ள இலங்கை தமிழர்களின் கஷ்டங்களை, உலக மக்களுக்கு தெரிய படுத்தி அணைத்து உலக மக்களின் ஆதரவை, உலக மொழிகளில் அனைத்து மொழிகளிலும் எடுத்து சொல்லி, உலக மக்களின் உதவிகள் அனைத்தும் இலங்கை தமிழர்களுக்கும் கிடைக்க செய்து அவர்களின் துன்பத்தை போக்கி அவர்களின் புது வாழ்க்கைக்கு முனேற்றம் காண வேண்டும். தமிழ் ஈழம் என்பது, நிச்சயம் இலங்கஏய் இரு துண்டாடி பெறுவது என்பதைவிட அவர்களின் வாழ்க்கை முன்னேற இந்தியாவும் நிச்சயம் தோல் கொடுக்கத்தான் வேண்டும். வியட்நாம் போர் என்பது உலக போரைவிட கொடுமையானது. இன்று வியட்நாம் எப்படி உள்ளது... சும்மா வருடா வருடம் தமிழகத்தின் அரசியல்வாதிகள் போராடாமல் உலக அரங்கில் உலக நீதி மன்றத்தில் அழுத்தம் கொடுத்து இன்றிலிருந்தே ஒன்று சேர்ந்து கோரினால் மட்டுமே இலங்கை தமிழர்களுக்கு விடிவு ...
Rate this:
Cancel
Erodeiva - ERODE,இந்தியா
24-மார்-201311:51:31 IST Report Abuse
Erodeiva செந்தமிழ் கார்த்திக்- ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் இலங்கை தமிழர்களை கொன்றது ஏதோ ராஜபக்சே மட்டும் தான் என்ற பிரச்சாரமே பொய்யானது. பிரபாகரனால் கொல்லப்பட்ட தமிழர்கள் அதை விட அதிகம். தீவிர வாதம் எங்கிருந்தாலும் அதை ஒடுக்க வேண்டியது, ஒழிக்கவேண்டியது அந்த நாட்டின் நாட்டு அரசின் கடமை. அந்த வகையில் பிரபாகரனை ஒழிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தது. அப்போது பிரபாகரனால் கேடயமாக பயன் படுத்தப்பட்ட அப்பாவி பொது மக்கள் உயிரிழந்தனர். சில அது மீறல்கள் இருந்திருக்கலாம். ( நாம் கூட இங்கே வந்த புத்த பிட்சுவை எதற்கு அடித்து விரட்டினோம்? உங்களை பார்க்க வந்த தங்க பாலுவை எதற்கு விரட்டினீர்கள்? ஹிந்தியை திணிக்க கூடாது என்று உங்களுக்கு எப்படி சொல்ல உரிமை இருந்ததோ அதே போல ஹிந்தியை எனக்கு சொல்லிக்கொடு என்று சொல்லவும் மக்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அடியோடு ஹிந்தி மொழியை மாநில கல்வி திட்டத்தில் இருந்து அகற்றும் உரிமையை யார் இவர்களுக்கு கொடுத்தார்கள்? இது மனித உரிமை மீறல் இல்லையா? ). அயல் நாட்டு கொள்கை அர்த்தமற்றது என்று சொல்லும் நீங்கள் நம் நாட்டில் நடக்கும் வரம்பு மீறல்கள் பற்றி - இங்கு முற்படுத்தப்பட்டோருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மனித உரிமை மீறல்கள் இல்லையா? ஒரு பிராமணன் குடுமி வைத்துக்கொண்டால் அவனது குடுமியை அறுக்க சொன்ன உங்கள் முன்னோடிகளுக்கு ஒரு முஸ்லிம் பர்தா போட்டால் அதை உருவி ஏறி என்று சொல்ல ஏன் திராணி இல்லாமல் போனது? எவன் பயந்து ஒதுங்கிகின்றானோ அவனை விரட்டுவது இந்த மொழி வெறி நாடக நடிகர்களுக்கு சவுகர்யமான காரியம். இவற்றை எல்லாம் ஏன் இங்கு சொல்ல விரும்புகின்றேன் என்றால் தமிழர்கள் மீது மற்றவர்களுக்கு அவ நம்பிக்கை ஏற்பட, இங்கு நடக்கும் போராட்டங்களை கூத்துக்களாக ( உண்மையில் இவை கூத்துகள் தான் என்பது வேறு விஷயம் ) அவர்கள் பார்ப்பதற்கு காரணம் உங்களை போன்ற மாணவர்கள் தவறானவர்களால் தவறான பாதைக்கு உணர்ச்சி வசப்படுத்தும் பேச்சுக்களால் இழுத்து செல்லப்படுவதே. நாம் இந்தியனாக இருக்கும் வரை நமக்கு உலகளவில் மதிப்பு அதிகம். தமிழனாக உங்களை தனிமைப்படுத்திகொண்டு காட்ட விரும்பினால் வெளி உலகம் உங்களை எலி அளவு கூட மதிக்காது. நாம் நம்மை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக்கொண்டு நம் மற்ற இந்திய சகோதரர்களை அரவணைத்து சென்றால் நிச்சயம் நமக்கு அகில இந்திய அங்கீகாரம் கிடைக்கும். அட அரசாங்கத்தை விடுங்க சார், மற்ற மாநில பொது மக்கள் நமக்கு ஆதரவு தரட்டும் 100 கோடி மக்களின் குரலாக இது ஒலிக்கட்டும் ஐ நா சபை மட்டுமல்ல, அமெரிக்கா வும் கண்டிப்பாக மசியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X