பெங்களூரு குண்டு வெடிப்பு இருவர் சிக்கினர்

Added : மே 13, 2013 | |
Advertisement
திருச்சூர்:பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, கோயம்புத்தூரைச் சேர்ந்த இரண்டு பேர், திருச்சூரில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.கர்நாடக மாநிலம், பெங்களூரில், பாரதிய ஜனதா அலுவலகம் முன், கடந்த மாதம், 17ம் தேதி குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில், 11 போலீசார் உட்பட, 17 பேர் காயமடைந்தனர்.இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, விசாரணை நடத்தி வரும் கர்நாடகா போலீசாருக்கு, தமிழக

திருச்சூர்:பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, கோயம்புத்தூரைச் சேர்ந்த இரண்டு பேர், திருச்சூரில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரில், பாரதிய ஜனதா அலுவலகம் முன், கடந்த மாதம், 17ம் தேதி குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில், 11 போலீசார் உட்பட, 17 பேர் காயமடைந்தனர்.இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, விசாரணை நடத்தி வரும் கர்நாடகா போலீசாருக்கு, தமிழக போலீசாரும் உதவி செய்து வருகின்றனர். சம்பவம் தொடர்பாக, இதுவரை, 11 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.இந்நிலையில், குண்டு வெடிப்பில் தொடர்புஉடையவர்கள் என, நம்பப்படும், கோவையைச் சேர்ந்த, சுல்பிகர் அலி, 22, மற்றும் சபீர், 24, என்ற இருவர், கேரளா, திருச்சூர் மாவட்டம், கெசேரி என்ற இடத்தில், கைது செய்யப்பட்டனர்.
இவர்களின் மொபைல் போன் சிக்னல்களை, தொடர்ந்து கண்காணித்து வந்த போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர். இதன்மூலம், பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக கைதானவர்களின் எண்ணிக்கை, 13 ஆக உயர்ந்து உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X