திண்டுக்கல்:திண்டுக்கல்லில்
நேற்று மாலை இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. திண்டுக்கல்
மாவட்டத்தில் அக்னி வெயிலின் உக்கிர கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மக்களை
வாட்டிய நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் திடீரென குளிர்ந்த காற்று
வீசத்துவங்கியது. தொடர்ந்து பலத்த இடி இடிக்கதுவங்கியது. திண்டுக்கல்
கோவிந்தாபுரம் ஆவின் அலுவலகம் அருகே இடி விழுந்ததில் தென்மை மரம் தீ பற்றி
லேசாக எரிந்தது. சிறிது நேரத்தில் திண்டுக்கல் நகர் முழுவதும் பரவலாக மழை
பொழிவு ஏற்பட்டது. மழையின் போது ரோட்டில் ஐஸ்கட்டிகள் சிதறின. ஆலங்கட்டி
மழை சிறிது நேரம் மட்டும் பெய்துவிட்டு நின்றது.கோடை மழை தொடர்ந்து
ஏமாற்றிவரும் நிலையில் நேற்று சிறிது நேரமாகவது தொடர் மழை பெய்யும் என்ற
மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.அக்னி நட்சத்திம் நிறைவாக மழை பொழிவு
ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கோடை மழை அடுத்தடுத்து பெய்யும் என்ற
எதிர்பார்ப்பு விசாயிகளிடம் உள்ளது.மாடு பலி: கன்னிவாடி பகுதியில் நேற்று
பகலில் 40 நிமிடம் மழை பெய்தது. ஆலத்தூரன்பட்டி, மணியகாரன்பட்டி,
கசவனம்பட்டி, கரிசல்பட்டி, தர்மத்துபட்டி பகுதிகளில் பெய்தமழையால்,
ஒரளவிற்கு வெப்பம் தணிந்தது. பரவலாக பலத்த காற்றுடன் மழைநீடித்தது. சில
இடங்களில் ஆலங்கட்டிகளுடன் மழை பெய்ந்தது. போத்திநாயக்கன்பட்டியில்
மின்னல்தாக்கி முருகைய்யாவின், மாடு இறந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE