பாங்காங்: பிரதமர் மன்மோகன்சிங் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தாய்லாந்து சென்றுள்ளார். ஜப்பான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மன்மோகன்சிங் அங்கிருந்து தாய்லாந்து சென்றுள்ளார். அங்கு அவர் அந்நாட்டின் பிரதமர் யிங்லங்ஷினவத்ராவை சந்தித்து ஏழு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார். மேலும் இரு நாடுகளிடையே கைதிகள் பரிமாற்றம் செய்து கொள்வது தொடர்பான ஒப்பந்தங்களும் இடம் பெற உள்ளது. பிரதமர் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு வரும் நாளை நாடு திரும்புகிறார்.