விருதுநகர்: விருதுநகர் அருகே, ரோட்டோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில், திருவண்ணாமலையைச் சேர்ந்த தம்பதியர் பலியாயினர்; மூவர் காயமடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்தவர், அந்தோணி ராஜ், 49; திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பஸ் ஸ்டாண்டில், பலசரக்கு கடை வைத்துள்ளார். இவரது மனைவி உஷாராணி, 44, மகள் சவுமியா, 21; மருத்துவக் கல்லூரி மாணவி, சந்தோஷ் பிரபு, 20, ஆகியோருடன், செங்கத்தில் இருந்து, சாத்தான் குளத்திற்கு, "இண்டிகா' காரில் சென்றனர். செங்கத்தை சேர்ந்த அசன்பாட்ஷா, 35, காரை ஓட்டினார். நேற்று காலை, 6:00 மணிக்கு, விருதுநகர் அருகே, எட்டநாயக்கன்பட்டி நான்கு வழிச்சாலையில் வந்த போது, ரோட்டோர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. உஷாராணி சம்பவ இடத்திலேயே பலியானார். விருதுநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அந்தோணிராஜ் இறந்தார். மற்ற மூவரும், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement