ஒசாமாவை கொல்ல மேற்கொள்ளப்பட்ட யுக்தி கண்டுபிடித்த சிவனாதனுக்கு விருது

Updated : ஜூன் 08, 2013 | Added : ஜூன் 07, 2013 | கருத்துகள் (105) | |
Advertisement
நியூயார்க் :சர்வதேச பயங்கரவாதி, ஒசாமா பின்லேடனை, கொல்லப் பயன்படுத்தப்பட்ட, "நைட்விஷன்' டெக்னாலஜியை கண்டுபிடித்த, அமெரிக்க வாழ் இலங்கை தமிழருக்கு, அமெரிக்க அரசின் சார்பில், "சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ஜ்' விருது வழங்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில், ஆண்டு தோறும், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கும், சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கும், அந்நாட்டு அரசு, "சாம்பியன்ஸ்
Prof. Sivanandan - honored by White Houseஒசாமாவை கொல்ல மேற்கொள்ளப்பட்ட யுக்தி கண்டுபிடித்த சிவனாதனுக்கு விருது

நியூயார்க் :சர்வதேச பயங்கரவாதி, ஒசாமா பின்லேடனை, கொல்லப் பயன்படுத்தப்பட்ட, "நைட்விஷன்' டெக்னாலஜியை கண்டுபிடித்த, அமெரிக்க வாழ் இலங்கை தமிழருக்கு, அமெரிக்க அரசின் சார்பில், "சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ஜ்' விருது வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், ஆண்டு தோறும், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கும், சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கும், அந்நாட்டு அரசு, "சாம்பியன்ஸ் ஆப் சேன்ஜ்' விருது வழங்கி, கவுரவிக்கிறது.இந்த ஆண்டு, அமெரிக்க வாழ் இலங்கை தமிழரான, சிவலிங்கம் சிவனாதனுக்கு, இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.சர்வதேச பயங்கரவாதியான, ஒசாமா பின்லேடனை கொல்ல மேற்கொள்ளப்பட்ட, "நைட்விஷன்' தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததற்காக இந்த விருது, இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர், யாழ்பாணத்தில் உள்ள, சாவகசேரியில் பிறந்தவர். தன் உயர் கல்விக்காக, 1982ம் ஆண்டு அமெரிக்கா சென்ற சிவனாதன், இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்று, இலினாய்ஸ் பல்கலையில், முனைவர் பட்டமும் பெற்றார்.

அதன் பின், அதே பல்கலையில் பேராசியராக பணியாற்றிக் கொண்டே, நுண் இயற்பியலில் தனது ஆராய்ச்சியை தொடர்ந்தார். இவரது ஆராய்ச்சியின் பயனாக, மிகக்குறைந்த ஒளியையும் லட்சம் மடங்கு பெருக்கிக் காட்டும் தொழில் நுட்பத்தை கண்டறிந்தார். அமெரிக்க படையினர், இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தியே, அமாவாசை இரவிலும், பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா மீது தாக்குதல் நடத்தி அவனை கொன்றனர்.இதற்காக, இலங்கைத் தமிழரான சிவனாதனுக்கு, "சாம்பியன்ஸ் ஆப் சேன்ஜ்' விருது வழங்கப்பட்டுள்ளது.இவ்வளவு நாட்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த உண்மையும், இந்த விருது வழங்கும் விழாவில் தான் வெளிப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (105)

Mohan babu G - Bangalore,இந்தியா
14-ஜூன்-201306:10:41 IST Report Abuse
Mohan babu G வாழ்த்துக்கள்.....
Rate this:
Cancel
Kumar - Trichy,இந்தியா
08-ஜூன்-201323:05:23 IST Report Abuse
Kumar இப்படிதான் நம்ம. நம்ம நாட்டிலிருந்து போய் அயல்நாட்டில் குடிபெயர்ந்தவர்கள் எதாவது செய்தாலோ, எதாவது அயல்நாட்டு தமிழன் செய்தாலோ ரொம்ப சந்தோசபடுறோம். இவரை பாராட்டலாம். ஆனால் இதில் நாம் பெருமைபடுவதற்கு ஒன்றும் இல்லை.
Rate this:
Cancel
k.sathiamoorthy - nagapattinam,இந்தியா
08-ஜூன்-201320:53:45 IST Report Abuse
k.sathiamoorthy முதலில் அவருக்கு பாதுகாப்பு குடுங்கப்பா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X