சேர்ந்தமரம்:சேர்ந்தமரம் புனித ராயப்பர், சின்னப்பர் ஆலய தேர்பவனி விழா நேற்று கோலாகலமாக நடந்தது.சேர்ந்தமரம் புனித ராயப்பர், சின்னப்பர் ஆலய 215வது ஆண்டு திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று அசன விருந்து, சிறப்பு நிகழ்ச்சி தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பாடல்பலிஆசீர், பூண்டி வர்க்கிஸ் குழுவினரின் தியான வழிபாடு நிகழ்ச்சியும், புனித சின்னப்பர் நற்பணிமன்றம் சார்பில் இன்னிசை கச்சேரி நடந்தது. ஆலயத்தில் 120வது ஆண்டு தேர்பவனி திருவிழாவான நேற்று 7ம் நாள் புனித ராயப்பர், சின்னப்பர் ஆலய தேர்பவனி நடந்தது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு புனித பீட்டர் நடுநிலைப்பள்ளி, புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.ஏற்பாடுகளை சேர்ந்தமரம் பங்குதந்தை மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.