ராஜபாளையம் நாய்கள் குறித்து புத்தகம்: விஞ்ஞானி தகவல்

Added : ஆக 02, 2013 | கருத்துகள் (7) | |
Advertisement
ராஜபாளையம் : "" ராஜபாளையம், சிப்பிப்பாறை நாய்களை ஆராய்ச்சி செய்து, இவற்றின் உடலமைப்பு, குணம் குறித்து, புத்தகம் வெளியிட உள்ளதாக, தேசிய விலங்கின மரபியல் ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி பி.கே.சிங் கூறினார். தேசிய விலங்கின மரபியல் ஆராய்ச்சி நிலைய, முதன்மை விஞ்ஞானிகளான பி.கே.சிங், ஏ.கே.மிஸ்ரா, முதன்மை ஆராய்ச்சியாளர் ராஜா, ஆகியோர் 2 நாட்களுக்கு முன்பு ராஜபாளையம் வந்தனர்.
ராஜபாளையம் நாய்கள் குறித்து புத்தகம்: விஞ்ஞானி தகவல்

ராஜபாளையம் : "" ராஜபாளையம், சிப்பிப்பாறை நாய்களை ஆராய்ச்சி செய்து, இவற்றின் உடலமைப்பு, குணம் குறித்து, புத்தகம் வெளியிட உள்ளதாக, தேசிய விலங்கின மரபியல் ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி பி.கே.சிங் கூறினார். தேசிய விலங்கின மரபியல் ஆராய்ச்சி நிலைய, முதன்மை விஞ்ஞானிகளான பி.கே.சிங், ஏ.கே.மிஸ்ரா, முதன்மை ஆராய்ச்சியாளர் ராஜா, ஆகியோர் 2 நாட்களுக்கு முன்பு ராஜபாளையம் வந்தனர். இவர்களுடன், வந்திருந்த ராஜபாளையம் கால்நடை பல்கலை ஆராய்ச்சி மைய தலைவர் கதிர்வேல், டாக்டர் சீனிவாசன், ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரி பேராசிரியர் தேவேந்திரன் ஆகியோர், நாய் பண்ணைகளை பார்வையிட்டனர். நாய் மற்றும் குட்டிகளின் செயல்பாடுகள், குணம், பண்பு, காவல் காக்கும் தன்மை குறித்து, குறிப்பு எடுத்து கொண்டனர். பின்னர், ராஜபாளையம் பல்கலை மையத்தில் நடந்த கூட்டத்தில், பி.கே. சிங் பேசியதாவது: நாய்கள் குறித்த ஆராய்ச்சிக்காக, இங்கு வந்தோம். முதன்முறையாக ராஜபாளையம் வகை, சிப்பிப்பாறை வகை நாய்களை ஆராய்ச்சிக்கு எடுத்து, இவற்றின் உடலமைப்பு, குணம் குறித்து சிறிய புத்தகம் வெளியிட உள்ளோம். இப்புத்தகம் நூலங்களுக்கு செல்லும்போது, தேசிய அளவில் பலரும், இந்த வகை நாய்கள் பற்றி அறிந்து கொள்வர். நாய் பண்ணையாளர்கள், தங்களுக்குள் ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். திட்டமிட்டு செயல்பட்டு, சந்தைப்படுத்துதலில் இறங்க வேண்டும். விஞ்ஞான முறைப்படி, பராமரித்தலை கற்று கொள்ள வேண்டும். நாய் கண்காட்சி போன்றவற்றை நடத்தவேண்டும். 6 மாதங்கள் பின், மீண்டும் இங்கு ஆராய்ச்சியில் ஈடுபடுவோம்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (7)

K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
03-ஆக-201321:03:55 IST Report Abuse
K.Sugavanam ராஜபாளையம் கோம்பை,மற்றும் சிப்பிபாறை வகை நாய்களுக்கு இணையாக மேலை நாட்டு நாய்களை கூட கருத முடியாது.எனவே இந்த இனங்களின் தனி தன்மை காக்க பட வேண்டும்.இவற்றிற்கு பூகோள குறியீடு{Geograhpical Identity}வழங்க பட முயல வேண்டும் தமிழக அரசு..
Rate this:
Cancel
03-ஆக-201317:35:21 IST Report Abuse
சுரேஷ்பாபு கம்பீரமான ஜாதி் நாய்.. எதற்க்கும் பயபடாது.
Rate this:
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
03-ஆக-201315:23:54 IST Report Abuse
Rangarajan Pg மிக நல்ல விஷயம். இந்த வகை நாய்களை பற்றி உலகம் அறிய வேண்டும். GOOD LUCK TO THE TEAM . GOOD JOB .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X