1.33 லட்சம் கனஅடி உபரி நீர்திறப்பு: மேட்டூர் அணை 3 நாளில் நிரம்பும்
1.33 லட்சம் கனஅடி உபரி நீர்திறப்பு: மேட்டூர் அணை 3 நாளில் நிரம்பும்

1.33 லட்சம் கனஅடி உபரி நீர்திறப்பு: மேட்டூர் அணை 3 நாளில் நிரம்பும்

Added : ஆக 02, 2013 | கருத்துகள் (25) | |
Advertisement
மேட்டூர்: கர்நாடகா அணைகளில் இருந்து, நேற்று மாலை, வினாடிக்கு, 1.33 லட்சம் கனஅடி உபரிநீர் திறந்ததால், மேட்டூர் அணை மூன்று நாளில் நிரம்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று மாலை, 110 அடியாகவும், நீர் இருப்பு, 78 டி.எம்.சி,யாகவும் இருந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில், மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் கனமழை
Nearly 1.33 lakh cubic feet per second water released from karnataka dams1.33 லட்சம் கனஅடி உபரி நீர்திறப்பு: மேட்டூர் அணை 3 நாளில் நிரம்பும்

மேட்டூர்: கர்நாடகா அணைகளில் இருந்து, நேற்று மாலை, வினாடிக்கு, 1.33 லட்சம் கனஅடி உபரிநீர் திறந்ததால், மேட்டூர் அணை மூன்று நாளில் நிரம்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று மாலை, 110 அடியாகவும், நீர் இருப்பு, 78 டி.எம்.சி,யாகவும் இருந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில், மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் கனமழை நீடிப்பதால், நேற்று காலை, வினாடிக்கு, 65 ஆயிரம் கனஅடியாக இருந்த கே.ஆர்.எஸ்., அணை உபரி நீர்திறப்பு, நேற்று இரவு வினாடிக்கு, 88,500 கனஅடியாகவும், வினாடிக்கு, 26 ஆயிரம் கனஅடியாக இருந்த கபினி உபரி நீர்திறப்பு, நேற்று இரவு, வினாடிக்கு, 45 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரிப்பட்டது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு, 1 லட்சத்து, 33,500 கனஅடி உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. இது, நடப்பாண்டு காவிரியில் திறக்கப்பட்ட அதிகபட்ச உபரிநீராகும் என்பதால், ஒகேனக்கல் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும். உபரிநீர், இன்று மாலை மேட்டூர் அணைக்கு வந்து சேரும். இதனால், மேட்டூர் அணை நீர்இருப்பு நாள் ஒன்றுக்கு, 10 டி.எம்.சி., அதிகரிக்கும். அணை நிரம்ப, 15 டி.எம்.சி., நீர் தேவை. இதனால், அடுத்த மூன்று நாளில், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (25)

Indhean - Chennai,இந்தியா
03-ஆக-201315:45:43 IST Report Abuse
Indhean இன்று மழை பெய்தவுடன் எல்லா பிரச்சினைகளும் ஓடி ஒளிந்து கொண்டன. இன்னும் சில நாள்களில் மேட்டூர் அணை நிரம்பி வழியும், மற்ற உபனதிகளும் அதன் பங்கிற்கு உபரி நீரை வெளியேற்றும். மொத்த உபரி நீரும் கடலில் சென்று வீணாகும். இன்னும் தென்கிழக்கு பருவ மழை காலத்தில் பெய்யும் அனைத்து மழை நீரும் வீணாகும், சில வாரங்களாக கோதாவரியில் தொடர்ந்த 3 லட்சம் கன அடி நீர் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு எடுத்து கடலில் வீணாகிறது. ஆனால் பெரும்பான்மையான தமிழக, ஆந்திரா, கர்நாடக மக்கள் இன்னும் குடி நீஎருக்கும் விவசாயத்திற்கும் தண்ணீர் இன்றி தற்கொலை செய்யும் நிலை.உத்ரகாண்ட் வெள்ளமும், தற்போதைய வெள்ளமும் அலகாபாத், காசியிலும், பல இடங்களில் சேதத்தை ஏற்படுத்தி கடலில் கலக்கிறது. 2004 தேர்தலில் வாஜ்பாயி நதி இணைப்பை தேர்தல் உறுதி மொழியாக சொன்னபோது, நாம் பல்லை இழித்துக்கொண்டு காங்கிரசுக்கு மதம் என்ற பேரிலும், ஜாதி என்ற பேரிலும், காசு வாங்கி கொண்டும் ஓட்டுப் போட்டோம், காங்கிரஸ் நமக்கு வேட்டு போட்டது. கங்கை காவிரி இணைப்பு சத்தியமே இல்லை என்று டவுசர் காந்தி சொன்னார். அல்லக்கைகளும், ஜால்ரா போட்டார்கள். நாமும் மறந்து போனோம். எல்லாம் யாரால், நம் அறியாமையால். இந்திய வளர்வதை நம் அரசியல் வாதிகள் மட்டுமல்ல, அந்நிய மீடியாக்கலும் விரும்பவில்லை. மேட்டூர் அணை நிரம்பினால் வீணாகும் தண்ணீரை, தமிழகத்தின் பல ஏரிகளில் திசை திருப்பி அதை சேமிக்க முடியும். உப்பாறு அணை என்று ஒரு அணை தாராபுரம் அருகில், உள்ளது அமரவாதி, PAP யில் வரும் உபரி நீரை கணக்கில் கொண்டு கட்டப்பட்டது. ஆனால், அமராவதி ஆயக்கட்டு விவசாயிகள், உபரி நீரை தந்தாள் அது அவர்களின் உரிமை ஆகிவிடும் என்று இந்த திட்டத்தை அனுமதிக்கவில்லை, இதனால் அந்த அணை என்றுமே வறண்டுதான் கிடக்கிறது .இதுபோல் பல திட்டங்கள் குப்பையில் கிடக்கிறது. அமராவதியில் உபரி நீர் வீணாகி கொண்டிருக்கிறது, ஆனால் அமராவதியில் உபரி நீரை சேமிக்க மக்கள் உரிமை கொண்டாடி அதை தடுக்கிறார்கள், இப்படி இருக்கும்போது, கர்நாடகாவும், கேரளமும் எப்படி நமக்கு தண்ணீர் கொடுக்கும் என்று எதிர் parka முடியும். தமிழக ஆறுகளை இணைக்க போவதாக சொன்ன முதல்வர், செயல்படுவாரா? மஞ்சதுண்டு ஒருபோதும் செய்யமாட்டார். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு முதல்வர் செய்ய வாய்ப்புள்ளது
Rate this:
navaneethan - பெங்களூரு,இந்தியா
03-ஆக-201323:44:50 IST Report Abuse
navaneethanவாங்கய்யா வாங்க.. PAP ல எத்தனை வருஷத்துக்கு ஒரு முறை தண்ணி விடுறாங்கன்னு தெரியுமா உங்களுக்கு? அமராவதி தண்ணி கரூர் வரை போகணும் தெரியுமா? இருக்குற நிலத்துக்கே தண்ணிய காணோம் இதுல உப்பாறு அணைக்கு தண்ணி வேணுமாம். PAP யில இருந்து தண்ணி விட்டாங்க உப்பாறு அணைக்கு.. நீங்க PAP யில தண்ணி இருக்கோ இல்லையோ அத கண்டுக்காம வருஷாவருஷம் கேக்க ஆரம்பிச்சுட்டீங்க..இத பாத்துக்கிட்டு தான் அமராவதி ஆயக்கட்டு விவசாயிகள் தடுக்கிறார்கள்.....
Rate this:
ganapathy - khartoum,சூடான்
04-ஆக-201317:23:55 IST Report Abuse
ganapathyவெள்ள நீரை திருப்பி விடுவதில் என்ன பிரச்சனையை இருக்க முடியும். இந்த மாதிரி கேள்வி கேட்பது, பெருந்தன்மையாய் சிந்திக்க தெரியாமல் தான் தமிழன் கஷ்ட படறான்....
Rate this:
Cancel
ganapathy - khartoum,சூடான்
03-ஆக-201314:54:03 IST Report Abuse
ganapathy இந்த வெள்ள நீரை எங்கு சேமிக்க போகிறோம். நெய்வேலி பங்குகளை வாங்கும் பணத்தில் தமிழகத்தில் புதிய அணை கட்ட முடியாதா. வெளிநாடு வாழ் தமிழர்கள், (புதிய அணையை ஒரு தனியார் கம்பெனி கட்டட்டும்வெளிநாடு வாழ் தமிழர்கள், உள்நாட்டு தமிழர்கள் மட்டும் முதலீடு பண்ணலாம். அந்த அணை தண்ணீரின் உபயோகத்துக்கு வசூல் செய்து கொள்ளலாம். அல்லது தமிழகமே முதலீடு செய்து அணை கட்டலாம். வருகின்ற உபரி நீரை பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம் போன்ற இடங்களில் கால்வாய் வெட்டி ( மக்களே சேர்ந்து வெட்டலாம்) குளம், குட்டைகளில் சேமிக்க வேண்டும்.
Rate this:
Cancel
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
03-ஆக-201313:08:03 IST Report Abuse
chinnamanibalan கர்நாடகம் தமிழகத்தை வஞ்சித்தாலும் இயற்கை வஞ்சிக்கவில்லை ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X