சிரியா மீதான தாக்குதலை 60 நாட்களுக்கு முடிக்க அமெரிக்க பார்லிமென்ட்டில் தீர்மானம்
சிரியா மீதான தாக்குதலை 60 நாட்களுக்கு முடிக்க அமெரிக்க பார்லிமென்ட்டில் தீர்மானம்

சிரியா மீதான தாக்குதலை 60 நாட்களுக்கு முடிக்க அமெரிக்க பார்லிமென்ட்டில் தீர்மானம்

Updated : செப் 05, 2013 | Added : செப் 05, 2013 | கருத்துகள் (31) | |
Advertisement
வாஷிங்டன்:சிரியா மீதான தாக்குதலை, 60 நாட்களுக்குள் முடிக்க அமெரிக்க பார்லிமென்ட்டில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்க வீரர்கள், அந்த நாட்டில் இறங்கி போரிடாமல், வான்வழி தாக்குதல் நடத்தவும், இந்த தீர்மானம் வழி செய்கிறது.சிரியாவின் அதிபர், பஷர்-அல்-ஆசாத் பதவி விலகக் கோரி, கிளர்ச்சியாளர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால்
Syria war resolution faces tough challenge in Congressசிரியா மீதான தாக்குதலை 60 நாட்களுக்கு முடிக்க அமெரிக்க பார்லிமென்ட்டில் தீர்மானம்

வாஷிங்டன்:சிரியா மீதான தாக்குதலை, 60 நாட்களுக்குள் முடிக்க அமெரிக்க பார்லிமென்ட்டில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்க வீரர்கள், அந்த நாட்டில் இறங்கி போரிடாமல், வான்வழி தாக்குதல் நடத்தவும், இந்த தீர்மானம் வழி செய்கிறது.
சிரியாவின் அதிபர், பஷர்-அல்-ஆசாத் பதவி விலகக் கோரி, கிளர்ச்சியாளர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ராணுவத்தினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே, கடும் சண்டை நடந்து வருகிறது.கடந்த மாதம், 21ம் தேதி, ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதால், 1,300 பேர் பலியானதாக கூறப்படுகிறது. ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய சிரியா மீது, ராணுவ தாக்குதலை நடத்த, அமெரிக்க அதிபர் ஒபாமா திட்டமிட்டு உள்ளார். இதற்காக, அமெரிக்க பார்லிமென்ட்டின் ஒப்புதலை கோரியுள்ளார். அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு, இஸ்ரேல், பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. சிரியாவுக்கு ஆதரவாக செயல்பட, ரஷ்யா திட்டமிட்டு உள்ளது. இதற்காக, உளவு கப்பல் ஒன்றை, மத்திய தரைகடல் பகுதிக்கு, ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது. ஜெர்மனும், பிரிட்டனும், இந்த தாக்குதலில் ஈடுபடப் போவதில்லை என, தெரிவித்துவிட்டன. "சிரியா மீது தாக்குதல் நடத்த வேண்டாம்' என, அரபு நாடுகளும், சீனாவும் கேட்டு கொண்டுள்ளன. சண்டைக்கு முன்னோட்டமாக, அமெரிக்கா, போர் கப்பலை, மத்திய தரைகடல் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது.

அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரி, அந்நாட்டு, பார்லிமென்ட்டின் மேல்சபையில் பேசுகையில், ""ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய, சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்காவிட்டால், ஈரான் மற்றும் வடகொரியா நாடுகளுக்கு கொண்டாட்டமாகிவிடும்; அதுமட்டுமல்லாது, சர்வதேச அளவில், தோழமை நாடுகளின் உறவை, நாம் இழக்க நேரிடும்,'' என்றார்.

சிரியா மீது தாக்குதல் நடத்த அனுமதி கோரும் தீர்மானம், அமெரிக்க பார்லிமென்ட்டில், நேற்று தாக்கல் செய்யப்பட்டது. சிரியா மீதான தாக்குதல் நடவடிக்கை, 60 நாட்களுக்குள் முடிய வேண்டும். இந்த நடவடிக்கையில், அமெரிக்க வீரர்களின் காலடி அந்த நாட்டு மண்ணில் படக்கூடாது. (அதாவது விமான தாக்குதல் அல்லது கடற்படை தாக்குதல் நடத்தப்பட வேண்டும்) என, இந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனினும், இந்த தீர்மானம், நேற்று இரவு வரை வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து (31)

என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
06-செப்-201306:49:39 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே ஒரு நாட்டினுள் கெமிகல் ஆயுதங்கள் பிரயோகித்தனர் என்று கூறி சிரியா மீது தாக்குதல் நடத்துமாயின் அப்போ சிறிலங்கா மீது என்ன தாக்குதல் நடத்தினீர் என்று கேள்வி முன்னேழுகிறது, இல்லை சிரியாவில் எல்லாம் கேட்டு பொய் விட்டது, அதனால் தான் இந்த தாக்குதல் என்றால் "நாளை இந்தியாவிலும் சட்டம் ஒழுங்கை இவர்கள்(கை கூலிகளை வைத்து) கெடுக்ககூடும், அப்போ நம்ம நிலைமை?", ஒரு புறம் தீவிரவாதிகள் என்ற பெயரில், இன்னொரு புறம் அவர்களை அடக்குகிறேன் என்ற பெயரில் , தாக்குதல்கள், கடைசியில் கஷ்டபடுவதும் சாவதும், குழந்தைகளும், பெண்களுமே, வயதான ஆண்களுமே, கடவுளே காபாட்ட்று,
Rate this:
Cancel
Sham - Ct muththur,இந்தியா
05-செப்-201321:49:26 IST Report Abuse
Sham ஆஹா.... ஆரம்பிச்சிட்டாங்கய்யா... ஆரம்பிச்சிட்டாங்க... இப்ப.., கட்டதொரைக்கு கட்டம் சரியில்லன்னு நெனைக்கிறேன்...
Rate this:
Cancel
Bro - Vandhai,இந்தியா
05-செப்-201321:26:46 IST Report Abuse
Bro 1300 நபர்களை சிரியா அரசு கொன்றது என்று சிரியா மீது போர் தொடுக்கின்றாய்... பாராட்டுகின்றோம்... அட திருட்டுப்பயலே, எனது ஒன்றரை லட்சம் ஈழச்சகோதரர்கள் கொல்லப்பட்டனரே... அப்போது ஏன் நீ இலங்கை மீது போர் தொடுக்கவில்லை... ஏன் ஈழத்தில் பெட்ரோல் இல்லை என்பதற்க்காகவா....? ஒரு கன்னத்தில் அறைந்தால், மற்றொரு கன்னத்தை காட்டு என்று கிறிஸ்துவம் சொல்கிறது... ஒருவன் அறைய எண்ணினாலே, கிறிஸ்தவ நாடான அமெரிக்க அவனை கொன்றுவிடுகின்றது... ஆசை படாதே என்று புத்த மதம் சொல்கின்றது... ஆனால் புத்த மதத்தை பெரும்பாண்மையாக பின்பற்றும் இலங்கையும், சீனாவும், தனக்கு சொந்தமில்லாத நிலத்தை அபகரிக்கின்றது... இலங்கை ஒருபடி மேல் சென்று, ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்றுகுவித்து, ஈழத்தை அபகரித்து... ஹிந்து மதமோ, எதிரி எந்த ஆயுதத்தைகொண்டு தாக்குகின்றானோ, அதே ஆயுதத்தைகொண்டு நீயும் தாக்கு என்கின்றது... ஆனால் ஹிந்துக்களை பெரும்பான்மையாகக்கொண்ட நமது இந்தியாவோ, அண்டை நாட்டு தீவிரவாதிகள் தாக்கும்போதேல்லாம், அண்டை நாட்டுடன் கிரிக்கெட் விளையாடமாட்டேன் என்கின்றது... அனால் நோபல் பரிசை இந்தியத்திருநாட்டின் பிரதமருக்கு கொடுக்காமல், ஒபாமாவிற்கு தருகின்றார்கள்... சீக்கிரம் கண் விழியுங்கள் எனது இந்தியத்திருநாட்டின் சகோதரர்களே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X