பா.ஜ., - தே.மு.தி.க., - ம.தி.மு.க., கூட்டணி : திருச்சியில் மனம் திறந்தார் இல.கணேசன்

Added : செப் 19, 2013 | கருத்துகள் (12) | |
Advertisement
திருச்சி: ""தமிழருவி மணியன் முயற்சிக்கும், பா.ஜ., - தே.மு.தி.க., - ம.தி.மு.க., கூட்டணி அமைந்தால் நல்லது,'' என, பா.ஜ., கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.பா.ஜ., இளைஞர் அணி சார்பில், 26ம் தேதி திருச்சியில் நடக்கும், "இளந்தாமரை' மாநாடு குறித்து, மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், திருச்சி தில்லை நகரில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற தேசிய செயற்குழு

திருச்சி: ""தமிழருவி மணியன் முயற்சிக்கும், பா.ஜ., - தே.மு.தி.க., - ம.தி.மு.க., கூட்டணி அமைந்தால் நல்லது,'' என, பா.ஜ., கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.
பா.ஜ., இளைஞர் அணி சார்பில், 26ம் தேதி திருச்சியில் நடக்கும், "இளந்தாமரை' மாநாடு குறித்து, மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், திருச்சி தில்லை நகரில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
நரேந்திர மோடி தமிழகம் வருகிறார் என்றதும், தமிழக முக்கிய பிரமுகர்கள், அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள் கூட, அவரை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் உள்ளனர். திருச்சி மாநாடு, எழுச்சியாக, திருப்புமுனையாக அமையும். தேசம் மீது விருப்பம், நன்மை குறித்து அக்கறைபடுபவர், மோடி வர வேண்டும் என விரும்புகின்றனர். தேசம் மீது அக்கறையில்லாத, தேச விரோதிகள், மோடி வருகையை எதிர்க்கின்றனர். யாருக்கு வேண்டுமானாலும், தங்கள் கட்சி சார்பாக பிரதமரை முன்னிறுத்தும் உரிமை உள்ளது. எங்களுக்கு அதில் ஆட்சேபனை இல்லை. முடிவு செய்ய வேண்டியது மக்கள் தான்.
இதுவரை கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கூட்டணியில்லாமல் போட்டியிடுவோம் என்று நாங்கள் இறுமாப்பாக பேசவில்லை. மோடியை பிரதமராக்க வேண்டும் என்பதால், கூட்டணியை விரும்புகிறோம். யாருடன் என்பது போக போகத் தெரியும். தமிழருவி மணியன் நல்ல தேசியவாதி. தமிழகத்தில் மாற்றம் வர வேண்டும் என்பதால், தே.மு.தி.க., - ம.தி.மு.க., - பா.ஜ., ஆகிய கட்சிகளை இணைக்க வேண்டும் என்று, சொந்த முயற்சியில் ஈடுபடுகிறார். அவரது முயற்சிக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம். வெற்றியடைந்தால் நல்லது. எங்கள் கட்சியில், பிரதமராக வர நிறைய பேர் உள்ளதால், இதில் யார் வருவார் என்ற சந்தேகம் இல்லாமல் இருக்க, மோடியை அறிவித்தனர். இவர் தான் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர். மோடி என்றால், லஞ்ச, லாவண்யம் இல்லாத, வளர்ச்சியடைந்த குஜராத் என்ற மாநிலம் தான் நினைவுக்கு வரும். பாரத தேசம் முழுவதும் அதை செய்ய மாட்டாரா என்ற ஆதங்கத்தால், அவரை முன்னிலைப்படுத்துகிறோம். இதில் தவறில்லை. இவ்வாறு கணேசன் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (12)

Pushparaj Ramakrishnan - Mannachanallur,இந்தியா
19-செப்-201317:46:46 IST Report Abuse
Pushparaj Ramakrishnan நீங்க அவல் கொண்டு வாங்க...நான் உமி கொண்டு வர்றேனு சொல்றதுக்கு அ.தி.மு.க., தி.மு.க., ஓ.கே... ஆனா உமியிடமே கேட்டால் என்ன தருவாங்க?
Rate this:
Cancel
Pushparaj Ramakrishnan - Mannachanallur,இந்தியா
19-செப்-201317:44:02 IST Report Abuse
Pushparaj Ramakrishnan இன்னுமா விஜயகாந்தை நம்புகிறார்கள்....
Rate this:
Cancel
ponnambalam s - CHENNAI,இந்தியா
19-செப்-201311:26:20 IST Report Abuse
ponnambalam s தற்போதைய உண்மையான வாக்குவங்கி என்ன வென்றால் : அதிமுக 24 %, திமுக 16 %, மதிமுக 12 % டு 14 %, பிஜேபி 15 %. தேமுதிக 7 % டு 8 % , பாமக 6 % , 2 கம்யூனிஸ்ட் 2% + 2 % & மீதி உதிரி கட்சிகள்........... ......... இதுதான் கடந்த 2 வருடங்களில் ஒவ்வொரு கட்சியும் தங்களுடைய செயல்பாடுகளின் மூலம் ஏற்படுத்திகொண்ட செல்வாக்கு ... அதே போல் அடுத்த பிரதமர் மோடி & பிஜேபி ஆட்சி என்பது தெளிவாகிவிட்டது ....அதேபோல் பிஜேபி இன் இலக்கு 272 + தொகுதிகள் வெற்றி. என்னைபொருத்தவரை "மோடி" அறிவிக்கப்பட்டதால், நியாயமாக பார்த்தாலும் , பிஜேபி மட்டும் குறைந்தபட்சம் 225 mp தொகுதிகளில் வெற்றிபெறும் .ஆகவே எந்த கட்சி அல்லது கூட்டணி 35 % வாகுகளுக்கு மேல் வாங்குகிறதோ அதுவே தமிழ் நாட்டில் வெற்றி பெரும்.........பிஜேபி (15%) + மதிமுக (12%) + அதிமுக (24%) என்ற கூட்டணி அமைந்தால் 40 ம் அந்த அணிக்கே.....ஆனால் ஜெயாவின் தான்தோன்றி போக்கு அதற்க்கு வழி செய்யாது ... கடந்த 10 வருடங்களுக்கு முன் இதே சாத்தான் ஒரு ஓட்டில் 13 மாத கால பிஜேபி ஆட்சியை கவிழ்த்து தேவையட்ற்ற ஒரு தேர்தலை, 1999 ல் , மக்கள் மீது திணித்தார்......... ஜெயாவின் மிகபெரியகெட்ட குணம் "தொக்கி எறியும் பண்பு". அவரை நம்பி சவாரி செய்ய முடியாது........ இப்படிப்பட்ட சூழலில் பிஜேபி (15%) + மதிமுக (12%) + தேமுதிக (8%) என்ற கூட்டணி அமைந்தால் அந்த அணி 30 தொகுதிகளுக்கு மேல் பெரும் வாய்ப்பு உள்ளது......... இந்த சமயத்தில் மதிமுக + பிஜேபி + தேமுதிக மற்றும் ஒத்த கட்சிகள் இதை எல்லாம் தாண்டி வலுவான கூட்டணி அமைத்து "கணிசமான" தொகுதிகளுடன் போட்டி & வெற்றி பெற வேண்டும்....... அப்பொழுதே தமிழ் நாட்டின் குரல் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.............மொத்தத்தில் திமுக + காங்கிரஸ் மண்ணை கவும் தமிழ் நாட்டில்...............
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X