சென்னை: பா.ம.க.,விடம் இழப்பீடு கோரும் டாஸ்மாக் வழக்குகளின் விசாரணை, இ"ம்மாதம், 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மரக்காணம் கலவரத்தில், டாஸ்மாக் கடைகள் மீது தாக்குதல் நடந்தது. இதற்கான இழப்பீடு மற்றும் வருவாய் இழப்பு கோரி டாஸ்மாக் நிர்வாகம், பா.ம.க., மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
வழக்கு விசாரணை, நேற்று வருவாய் நிர்வாக ஆணையர் ஸ்ரீதர் முன்னிலையில் வந்தது.
"பொது சொத்து சேதச் சட்டத்தின் கீழ், எங்களிடம் இழப்பீடு கோர முடியாது என, சென்னை உயர்நீதிமன்றத்தில், பா.ம.க., சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், அரசுக்கு விளக்கம் கேட்டு, சூநோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. இதனால், வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும்' என, பா.ம.க., வழக்கறிஞர்கள் கோரினர். "வருவாய் இழப்புக்கு கோருவதற்கு எதிராகவே மனு தாக்கல் செய்துள்ளனர். சேதத்திற்கான இழப்பு கோரியதில் எந்த சிக்கலும் இல்லை' என, டாஸ்மாக் வழக்கறிஞர்கள் தெரிவித்தார்.
சூஇது தொடர்பாகவும், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என, பா.ம.க., வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, வழக்கின் விசாரணை, அக்.31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE