பதிவு செய்த நாள் :
கருத்துகள் (23)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான கோசாலையில், உணவு வழங்காததால் பசுக்களும், கன்றுகளும் இறந்தது, பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆண்டுதோறும் நடக்கும், இப்பிரச்னைக்கு முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பக்தர்கள் கொதிப்பு:
சமீபத்தில், திருவண்ணாமலைஅக்னீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான கோசாலையில், உண்ண உணவின்றி, பசு, கன்றுகள் இறந்தது, நாடு முழுக்க உள்ள, பக்தர்களை கொதிப்படைச் செய்துள்ளது.

இது குறித்து, இந்து முன்னணிமாவட்ட அமைப்பாளர், சங்கர் கூறியதாவது: கோசாலையில், 130க்கும் மேற்பட்ட பசுக்கள் இருந்தன. இவை பல, மாதங்களாக ஒருவேளை உணவுக்கு கூட வழியின்றி தவித்து வருவதாக, எங்களுக்கு தகவல் வந்தது.நேரில் பார்த்ததில் அதில் உண்மை என, தெரிய வந்தது. அதற்காக போராட்டம் நடத்தினோம். அதற்குள், ஐந்து பசுக்களும், மூன்று பச்சிளம் கன்றுகளும் இறந்து விட்டன.பிரேத பரிசோதனையில், அனைத்து மாடுகளும், உண்ண உணவின்றி, பிளாஸ்டிக் பைகளை தின்றதால் இறந்தன என்பது, தெரிய வந்தது. இதன் மூலம், அறநிலையத் துறை, பசியால் பசுக்கள் சாவதை வேடிக்கை பார்த்தது என்பது, வெட்ட வெளிச்சமாகி உள்ளன.இதே போல், சில ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சொந்தமான மாடுகள் விற்பனை செய்யப்படுவதாக

புகார் எழுந்த போது, உயர்நீதிமன்றம், பல்வேறு விதிமுறைகளுக்கு கோசாலைகளுக்கு விதித்தது. அதில், ஒன்றை கூட, அறநிலையத்துறை நடைமுறைபடுத்துவதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

'கடமை' அளவில்...:பசுக்கள் இறந்ததன் எதிரொலியாக, திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர், பரஞ்சோதி, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். சென்னை மண்டல இணை ஆணையர் திருமகள், திருவண்ணாமலை மண்டல இணை ஆணையராக, கூடுதல் பொறுப்பு வகிப்பார் என, கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அனைத்து கோவில்களுக்கும் கோசாலை, நடத்துவதற்கான விதிமுறைகளை, அறநிலையத்துறை அனுப்பி உள்ளது.ஒவ்வொரு ஆண்டும், இது போன்ற சம்பவங்கள் எழும் போது, செயல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்புவதோடு, பிரச்னை முடிந்து விட்டதாக, அறநிலையத்துறை எண்ணுகிறது. ஆனால், பிரச்னைகள் தீர்ந்தபாடில்லை.தமிழக முதல்வர், இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு, தீர்வு காண வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கை.கோவில் தரப்பினர், 'இம்மாவட்டத்தில், போதிய அளவில் புல் கிடைக்கவில்லை. இருந்தாலும், முறையாக, வைக்கோல் வைக்கப்படுகிறது. பசுக்கள், கன்றுகள் இறந்ததற்கு காரணம், அவற்றுக்கு உடல்நிலை சரியில்லை' என்றனர்.

பசுக்கள் மாயமானபோதே நடவடிக்கை எடுத்திருக்கலாமே!
'திருச்செந்துார் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு காணிக்கையாக

Advertisement

பெறப்பட்ட, கால்நடைகளில் இருந்து, தனியார் கோசாலைகளுக்கு வழங்கப்பட்ட, 5,389 பசுக்கள் மாயமாகி உள்ளன' என, தணிக்கைத் துறை ஆய்வில் தெரியவந்தது. அப்பசுக்கள், கசாப்பு கடைகளில் விற்கப்பட்டிருக்கலாம் என, பக்தர்கள் கருதினர்.இது குறித்து விரிவான செய்தி, 'தினமலர்' நாளிதழில், கடந்த ஆண்டு, நவம்பர், 29ல், வெளியானது.இது குறித்து, விளக்கம் கேட்டு, 30.12.12 தேதியில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால், இணை ஆணையருக்கு கடிதம், எழுதினார். இதன் தொடர்ச்சியாக, தல ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், கோவிலுக்குச் சொந்தமான, 1,3,5,6 ஆகிய எண் கொண்ட, கோசாலைகளில்முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது.மேலும், இக்கோசாலைகள், தங்களிடம் பதிவு பெற்ற, பிற கோசாலைகளுக்கு தாங்கள் பெற்ற, கால்நடைகளை பகிர்ந்து வழங்குவதில், தடை செய்யும் வகையில், சட்ட நெறிமுறைகள், வழிகாட்டுதல்கள் ஏதும் நடைமுறையில் இல்லாததாலும், இக்கோசாலைகளிடம் இருந்து கால்நடைகளை பெறும், பிற கோசாலைகள், பல மாவட்டங்களில் உள்ளதாலும், இக்கோசாலைகளின் நடவடிக்கையை, கண்காணிக்க முடியவில்லை என, இணை ஆணையர் தரப்பு ஒதுங்கிக் கொண்டது.இதுநாள் வரை, அறநிலையத்துறை தவறு இழைத்த அதிகாரிகள் மீதோ, கோசாலை நிர்வாகத்தையோ தண்டிக்கவில்லை. கடந்த ஆண்டே, அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், இந்நிலை வந்திருக்காது. எனவே, முதல்வர் இப்பிரச்னையில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, பக்தர்களின் கோரிக்கை.
- நமது நிருபர் -




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (23)
Ramanathan - chennai,இந்தியா
28-அக்-201319:40:19 IST Report Abuse
Ramanathan சமுதாய சீர்கேடுகளை எதிர்த்து போராட எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து முன் வர வேண்டும். சாலைகளில் பள்ளம் இருக்கும் இடத்தில் சிறிது கல் மண் ஆகியவற்றை எடுத்து போடவேண்டும். சிறு சிறு உதவிகளை மக்களுக்கு கஷ்டப்படும் நேரத்தில் செய்ய வேண்டும். இப்படி உதவி செய்தால் நிர்வாகம் நிலைக்கும்
Rate this:
Share this comment
Cancel
ramasamy naicken - Hamilton,பெர்முடா
24-அக்-201320:29:27 IST Report Abuse
ramasamy naicken அண்ணாமலையார் கோவிலில் பணிபுரியும் சிவனடியார்களை பாருங்கள். ஒவொருவரும் குட்டியானை அளவில் இருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
B.SARAVANAN - cuddalore,இந்தியா
24-அக்-201319:12:42 IST Report Abuse
B.SARAVANAN கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகில் உள்ள கொல்லிமலை அருள்மிகு சிவலோக நாதர் திருகோயில் சொத்துக்களை அந்த ஆலயத்தின் அரங்காவலரே விற்பனை செய்தது ஆதரத்தோடு நிரூபித்தும் நமது இந்து அறுவை நிலையத்துறை நடவடிக்கை இல்லை ,.தினமலர் எச்குளுசிவ் செய்தி வரவைக்க என்ன செய்யவேண்டும் ?.சரவணன் செல் 9865311036,
Rate this:
Share this comment
Cancel
Venkatesan Deekshithar - Chidambaram,இந்தியா
24-அக்-201312:50:21 IST Report Abuse
Venkatesan Deekshithar ஹிந்து அறநிலையத் துறை எல்லாக் கோவில்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதில்லை. எந்த கோவில்களில் வருமானம் வருகிறதோ, அத்தகைய பெரிய கோவில்களை தான் பெரும்பாலும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது. மேலும் அந்த கோவில்களில் இருக்கும் ஹுண்டியல் பணம் எல்லாவற்றையும் ஹிந்து அறநிலையத் துறை அள்ளிக் கொண்டு போகிறது. மேலும் அர்ச்சனை சீட்டு வருமானம், ஸ்பெஷல் டிக்கெட் வருமானம் எல்லாமும் அறநிலையத் துறைக்கு தான் போகிறது. இத்தனையையும் எடுத்துக் கொண்டு போகிறார்களே.. ஆனால் இந்த மாதிரி கோ சாலைகளுக்கோ, வருமானம் இல்லாமல் கஷ்டப் படும் கொவிகளுக்கோ எதாவது செய்கிறார்களா என்றால் இல்லை. ஆனால் கோவில்களில் வரும் வருமானத்தை மட்டும் அள்ளி கொண்டு போகிறார்கள். பிறகு எதற்கு அறநிலையத் துறை. மத விஷயத்திலோ, வழிபாட்டு விஷயத்திலோ எந்த அரசும் தலையிடக் கூடாது. ஒவ்வொரு கோவில்களையும் அந்தந்த கோவில் நிர்வாகமே நிர்வகித்துக் கொள்ளட்டுமே. அதனால் தான் நாங்கள் எப்போதும் அறநிலையத் துறை கீழ் வரும் கோவில்களில் ஹுண்டியலில் பணம் போடுவதோ மேலும் எந்த ஒரு சேவைக்கும் (அர்ச்சனைத் தவிர) பணம் கொடுப்பதோ கிடையாது. ஏதாவது செய்ய வேண்டும் என்றால் நாங்கள் சுவாமிக்கு சாற்றுவது போல பூவோ, வேறு எதாவது பொருளோ, மற்றும் அர்ச்சனைக்கு வேண்டிய பொருளோ வாங்கிக் கொடுத்து விடுவோம். இப்படி நாம் வாங்கிக் கொடுப்பது சுவாமிக்கும் நேரடியாக சேர்ந்து விடுகிறது, நமக்கும் மன நிம்மதி கிடைக்கிறது. அதனால் நீங்களும் இதை பின் பற்றலாமே..... அறநிலையத் துறை கீழ் வரும் எந்த ஒரு கோவிலிலும் ஹுண்டியலில் பணம் போடாதீர்கள். எந்த ஒரு சுவாமியும் உங்களை பணம் கேட்பதில்லை. அதற்கு பதில் சுவாமிக்கு சாற்றுவதற்கு ஒரு பொருளாக வாங்கிக் கொடுங்கள். கோ சாலை இருந்தால் நீங்களே முன்னின்று அந்த பசுக்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
s.venkataraman - thiruvannamalai,இந்தியா
24-அக்-201311:43:07 IST Report Abuse
s.venkataraman கோயிலில் மாடு தானம் கொடுக்கும்போது அதன் பராமரிப்புக்காக பணம் வசூல் செய்கிறார்கள் அதனை என்ன பண்ணுகிறார்கள் என்பது அண்ணாமலையாருக்குதான் தெரியும்
Rate this:
Share this comment
Cancel
PALANIVEL RAMJI - CHENNAI,இந்தியா
24-அக்-201303:33:52 IST Report Abuse
PALANIVEL RAMJI மிஸ்டர் P மணிமாறன் மண்டையில்தான் ஒன்னும் இல்ல மண்டைகுள்ளயுமா ஒன்னும் இல்ல ?
Rate this:
Share this comment
Cancel
Kannagi Sridhar - Chennai,இந்தியா
24-அக்-201300:50:51 IST Report Abuse
Kannagi Sridhar அம்மா ,,,தாயே,,, கோமாதா,,தமிழர்களின் குல மாதா,,,வாயிலா உன்னை பால் கொடுக்கிறாய் என்று நாங்கள் வணங்குகிறோம்,,, அரேபியாவில் ஒட்டகம் பால் தருது,,ஆஸ்திரேலியாவில் கங்காரு பால் தருது,,அறிவு கெட்டவர்கள் அதை வணங்குவதில்லை , நம் அன்னை மாடு ,,கோமாதா உனக்கு இந்த கெதியா? வாயிலாத ஜீவன் நீ,,,என்ன செய்வாய். உன்னை தெய்வம் ஆக்குகிறார்கள் ,,,உன்னை கொல்கிறார்கள்.மனம் வேதனை அடைகிறது. ஒரு தெய்வத்திற்கே இந்த நிலை என்றால் ,,,,,,,,,,,,,,,நாம் எங்கே?
Rate this:
Share this comment
Cancel
S.Sriram - Kumbakonam,இந்தியா
24-அக்-201300:45:14 IST Report Abuse
S.Sriram ஹிந்து அறநிலையத் துறை எல்லாக் கோவில்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதில்லை. எந்த கோவில்களில் வருமானம் வருகிறதோ, அத்தகைய பெரிய கோவில்களை தான் பெரும்பாலும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது. மேலும் அந்த கோவில்களில் இருக்கும் ஹுண்டியல் பணம் எல்லாவற்றையும் ஹிந்து அறநிலையத் துறை அள்ளிக் கொண்டு போகிறது. மேலும் அர்ச்சனை சீட்டு வருமானம், ஸ்பெஷல் டிக்கெட் வருமானம் எல்லாமும் அறநிலையத் துறைக்கு தான் போகிறது. இத்தனையையும் எடுத்துக் கொண்டு போகிறார்களே.. ஆனால் இந்த மாதிரி கோ சாலைகளுக்கோ, வருமானம் இல்லாமல் கஷ்டப் படும் கொவிகளுக்கோ எதாவது செய்கிறார்களா என்றால் இல்லை. ஆனால் கோவில்களில் வரும் வருமானத்தை மட்டும் அள்ளி கொண்டு போகிறார்கள். பிறகு எதற்கு அறநிலையத் துறை. மத விஷயத்திலோ, வழிபாட்டு விஷயத்திலோ எந்த அரசும் தலையிடக் கூடாது. ஒவ்வொரு கோவில்களையும் அந்தந்த கோவில் நிர்வாகமே நிர்வகித்துக் கொள்ளட்டுமே. அதனால் தான் நாங்கள் எப்போதும் அறநிலையத் துறை கீழ் வரும் கோவில்களில் ஹுண்டியலில் பணம் போடுவதோ மேலும் எந்த ஒரு சேவைக்கும் (அர்ச்சனைத் தவிர) பணம் கொடுப்பதோ கிடையாது. ஏதாவது செய்ய வேண்டும் என்றால் நாங்கள் சுவாமிக்கு சாற்றுவது போல பூவோ, வேறு எதாவது பொருளோ, மற்றும் அர்ச்சனைக்கு வேண்டிய பொருளோ வாங்கிக் கொடுத்து விடுவோம். இப்படி நாம் வாங்கிக் கொடுப்பது சுவாமிக்கும் நேரடியாக சேர்ந்து விடுகிறது, நமக்கும் மன நிம்மதி கிடைக்கிறது. அதனால் நீங்களும் இதை பின் பற்றலாமே..... அறநிலையத் துறை கீழ் வரும் எந்த ஒரு கோவிலிலும் ஹுண்டியலில் பணம் போடாதீர்கள். எந்த ஒரு சுவாமியும் உங்களை பணம் கேட்பதில்லை. அதற்கு பதில் சுவாமிக்கு சாற்றுவதற்கு ஒரு பொருளாக வாங்கிக் கொடுங்கள். கோ சாலை இருந்தால் நீங்களே முன்னின்று அந்த பசுக்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
23-அக்-201322:00:40 IST Report Abuse
தஞ்சை மன்னர் படத்தினை பார்த்தல் அப்படி தெரியவில்லை, பணம் வசூல் செய்து கொள்ளை அடிக்க கூட்டம் தயாராகி வருகிறது. வரும் பணத்திற்கு இது வரை கணக்கு தரவில்லை என்று கோசலை பராமரிக்கும் கூட்டம் சூறை யாடுகிறது என்று அற நிலையத்துறை புகார் கூறுகிறது. இதில் எது உண்மை என்று புரியவில்லை
Rate this:
Share this comment
Cancel
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
23-அக்-201321:57:03 IST Report Abuse
தஞ்சை மன்னர் தண்ணி வித்த காசில் கோ சாலைக்கு பாவம் சேர்ப்பதை விட, அதுகளை ஏலத்தில் விடுத்து வரும் பணத்தினை கன்றுகளை பாதுகாக்கலாம், ஏழைகள் உணவு பிரச்சினை தீரும், கோசலைக்கு பணமும் கிடைக்கும், ஆலோசனை சொன்னால் இந்து முன்னணி அரை டவுசர்களுக்கு கோபம் வரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X