கோவை :பாரதியார் பல்கலையின் கல்விப் பணியாளர் கல்லூரியில் 100வது புத்தாக்கப்பயிற்சி மற்றும் 246வது அறிமுகப் பயிற்சி நேற்று துவங்கியது. புத்தாக்கப்பயிற்சி 21 நாட்களும், அறிமுகப்பயிற்சி 28 நாட்களும் தொடர்ந்து நடக்கிறது. நிகழ்ச்சியில், ஆங்கிலத்துறை பேராசிரியர் சரவணச்செல்வன் வரவேற்றார். கல்விப் பணியாளர் கல்லூரி இயக்குனர் சேதுராம சுப்பையா முன்னிலை வகித்தார்.
பாரதியார் பல்கலை துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சை பேசியதாவது: கல்விக்கு முடிவு என்பதே கிடையாது. ஆசிரியர்கள் இதுபோன்ற நிகழ்ச்சியின்மூலம் தங்களை தயார்ப்படுத்தி, மாணவர்களுக்கு கற்றுத்தரவேண்டும். சமுதாயத்தில் தலைசிறந்து விளங்கும் வகையில் வழிநடத்த வேண்டும். உயர்கல்வியில் மாணவர்களின் பங்களிப்பு 19 சதவீதம் உள்ளநிலையில், இவைமேலும் உயர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. மாணவர்களை நல்ல முறையில் வழிநடத்தி, ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டும் வகையில் ஆசிரியர்கள் செயல்பட வேண்டும், என்றார். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 200 பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE