ஆணிகளை எறிந்து பொதுமக்களை கொல்ல சதி: மதுரை, திண்டுக்கல்லில் 10 பேர் கைது

Added : டிச 06, 2013 | கருத்துகள் (20) | |
Advertisement
திண்டுக்கல்: திண்டுக்கல்லில், பஸ்கள் மீது ஆணிகளை கொண்ட பைப்களை வீசி, பொது சொத்தை சேதப்படுத்தி, பொதுமக்களை கொல்ல சதி திட்டம் தீட்டிய 10 பேரை, மதுரை, திண்டுக்கல்லில் போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் பகுதியில், டி.எஸ்.பி.,ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் பரவாசுதேவன், புகழேந்தி ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர், நேற்று, சோதனை மேற்கொண்டனர். அப்போது, செல்லாண்டியம்மன் கோயில்
ஆணிகளை எறிந்து பொதுமக்களை கொல்ல சதி: மதுரை, திண்டுக்கல்லில் 10 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில், பஸ்கள் மீது ஆணிகளை கொண்ட பைப்களை வீசி, பொது சொத்தை சேதப்படுத்தி, பொதுமக்களை கொல்ல சதி திட்டம் தீட்டிய 10 பேரை, மதுரை, திண்டுக்கல்லில் போலீசார் கைது செய்தனர்.


திண்டுக்கல் பகுதியில், டி.எஸ்.பி.,ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் பரவாசுதேவன், புகழேந்தி ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர், நேற்று, சோதனை மேற்கொண்டனர். அப்போது, செல்லாண்டியம்மன் கோயில் பகுதியில் கும்பல் ஒன்றை சுற்றி வளைத்தனர். இதில், ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்; எட்டு பேர் தப்பியோடினர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த அகில உலக இஸ்லாமிய கழகத் தலைவர் முபாரக், 34, ஜாபர்அலி, 35, கணவா சையது, 29, யாசிக், 28, சேக்பரித், 23, அபிபுல்லா, 28, என, தெரிந்தது. பொதுமக்களுக்கு இடையூறு செய்யவும், பொது சொத்துக்கு சேதப்படுத்தவும் சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து, திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் கைது செய்தனர்.



மதுரையிலும் கைது:

மதுரையிலும் 4 பேரை சுப்பிரமணியபுரம் போலீசார் கைது செய்தனர். போலீசார் கூறியதாவது: மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ஷேக்முகமது,19, கல்லூரி மாணவர் தாகா முகமது, 20, தெற்குவாசல் மீன்வியாபாரி நசீர்,22, நெல்பேட்டை மீன்வியாபாரி சம்சுதீன், 25, கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், நேற்று திண்டுக்கல்லில் நடந்த ரயில் மறியல் போராட்டத்திற்கு செல்ல முடிவு செய்திருந்தனர். செல்லும் வழியில், திண்டுக்கல் நகர் பகுதியில், மக்கள் கூடும் இடங்களில், பஸ் ஓட்டி வரும் டிரைவர்கள் மீது ஆணிகளை கொண்ட "பைப்' களை வீசி, விபத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருந்தனர். அங்கு முடியாதபட்சத்தில், மதுரை அவனியாபுரம் "ரிங்' ரோட்டில் திட்டத்தை நிறைவேற்ற இருந்தனர். காரணம், மதுரையில் பெட்ரோல் குண்டு வீசி, அரிவாளால் வெட்டி ஒருவர் கொல்லப்பட்டதற்கு பழிக்குப்பழியாக சம்பவம் நடந்தது போல், போலீஸ் கவனத்தை திசை திருப்ப திட்டமிட்டிருந்தனர். இவ்வாறு, போலீசார் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (20)

சுப்ரமணியன் - பொள்ளாச்சி ,இந்தியா
09-டிச-201315:40:16 IST Report Abuse
சுப்ரமணியன் இவ்வளவுக்கும் நம் "சகோதரர்கள்" ஒருவரிடம் இருந்து கூட இந்த ஈன செயலுக்கு கண்டனமோ எதிர்ப்போ தெரிவித்து கருத்து எதுவும் வராதது எனக்கு ஆச்சரியம் அளிக்க வில்லை... நாம் தான் நிலைமை அறிந்து நம்மை காத்துக்கொள்ள முடிவெடுக்க வேண்டும்... இல்லையேல் வரும் நம் சந்ததியினர் நம்மை தூற்றுவர்...
Rate this:
Cancel
Raju Perur Coimbatore - Coimbatore,இந்தியா
08-டிச-201302:21:42 IST Report Abuse
Raju Perur Coimbatore ஒரு சிலர் படிப்பறிவின்றி ஆட்டுவிபவர்களின் கைப்பாவையாக இவர்கள் மாட்டிக்கொள்கின்றனர். இவர்களுக்கு சமுதாயத்தை புரிந்து நடத்த சொல்லி தர வேண்டும். counselling தேவை. நம் சகோதரர்கள் . மதம் மனிதனை பிரிக்கும் கருவியாக அரசியல் வியாதிகள் உபயோக படுத்துகிறார்கள். வாழ்கையை தொலைக்கும் இவர்களை செம்மைபடுத்த வேண்டும். மனித நேயம் அவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாம் அப்படி இருக்க கூடாது.
Rate this:
Cancel
Truth Teller - chennai,இந்தியா
07-டிச-201321:41:55 IST Report Abuse
Truth Teller ஏன் ஒரு இஸ்லாமியர்களும் இதை எதிர்த்து கருது சொல்லவில்லை . முஸ்லிம் நாடுகளில் சிருபான்மையிரை ஒரு மனிதர்களாக கூட நடத்துவது இல்லை , இந்தியாவில் சிருபான்மையிற்கே அதிக சலுகை உள்ளது. Still minorities trying very hard to make the majority irritated.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X