சென்னை:குவைத் நாட்டில் இருந்து, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, 'குவைத் ஏர்லைன்ஸ்' விமானம் சென்னை வந்தது.
இதில் வந்த பயணிகளிடம், குடியுரிமைத் துறை அதிகாரிகள், பாஸ்போர்ட் சோதனையில் ஈடுபட்டனர். மைசூரைச் சேர்ந்த, முகமது முசார் அகமது, 34,
என்பவரின் பாஸ்போர்ட்டை சோதனையிட்டதில், அவர்
தலைமறைவு குற்றவாளி என்பது தெரியவந்தது. போலீசார், அகமதுவை தேடிய போது, அவர் வெளிநாட்டிற்கு தப்பியோடி தலைமறைவானார்.
இதனால், மைசூர் போலீசார், முகமதுவை, தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தனர். நேற்று
அதிகாலை, சென்னை வந்த அகமதுவை கைது செய்த, சென்னை குடியுரிமைத் துறை அதிகாரிகள், மைசூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.