தி.மு.க., கூட்டணியா? பா.ஜ., அலறல்| Dinamalar

தி.மு.க., கூட்டணியா? பா.ஜ., அலறல்

Added : டிச 22, 2013 | |
சென்னை:''தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, பா.ஜ., முயற்சிக்காத நிலையில், கூட்டணி பற்றி, அக்கட்சி கூறும் கருத்துகளுக்கு, பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை,'' என, பா.ஜ., மாநிலத் தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.இதுகுறித்து, அவர் நேற்று அளித்த பேட்டி:தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து, தமிழக பா.ஜ.,வோ, கட்சியின் அகில இந்திய தலைமையோ, இதுவரையில் எந்த நடவடிக்கையும்

சென்னை:''தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, பா.ஜ., முயற்சிக்காத நிலையில், கூட்டணி பற்றி, அக்கட்சி கூறும் கருத்துகளுக்கு, பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை,'' என, பா.ஜ., மாநிலத் தலைவர்,
பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
இதுகுறித்து, அவர் நேற்று அளித்த பேட்டி:
தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து, தமிழக பா.ஜ.,வோ, கட்சியின் அகில இந்திய தலைமையோ, இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், 'பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை' என, தி.மு.க.,
கூறுவதற்கு, நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
'மோடியை பிரதமராக ஏற்கும், கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம்' என, ஏற்கனவே அறிவித்துள்ளோம். எனவே, அதன் அடிப்படையில், தமிழகத்தில் கூட்டணி அமைப்பது குறித்து, உரிய நேரத்தில் முடிவெடுக்கப் படும்.
இவ்வாறு, பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி நாராயணன், ஐக்கிய ஜனதா தளம் பொது செயலர், தர்மன் யாதவ், 28 பாதிரியார், 50 வழக்கறிஞர் மற்றும், 75 கல்லுாரி மாணவர்கள் ஆகியோர் பொன்.ராதாகிருஷ்ணன்
முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X