எம்.கே.பி.,நகர் : தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு, காவல் நிலையத்தில், இளம்ஜோடி தஞ்சம் அடைந்தனர். வியாசர்பாடி,
எஸ்.ஏ.,காலனியை சேர்ந்தவர், வேலாயுதம். அவரது, மகள் யசோதா, 23;
அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனரான, தங்கதுரை, 24,
என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன், இருவரும் வீட்டை விட்டு தலைமறைவாகினர்.இந்நிலையில்,
நேற்று காலை எம்.கே.பி.,நகர் காவல்நிலையத்தில், அவர்கள் பாதுகாப்பு கேட்டு
தஞ்சம்அடைந்தனர். அவர்களின் பெற்றோரை வரவழைத்த போலீசார், சமரசம் பேசினர்.
அதில், பெண்ணின் விருப்பப்படி, காதல் கணவருடன், அனுப்பி வைக்கப்பட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE