லோக்சபா தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி, 'பேச்சைக் குறை, தேவையானதை மட்டும் பேசு' என்ற வாசகத்தை வெளியிட்டு உள்ளது. தென்மாநிலங்களின் வளர்ச்சி பணிகள், பிரதமரின் மவுனம், காங்கிரஸ் ஆட்சியில் மலிந்துள்ள ஊழல்கள் குறித்த கேள்விகளை, மக்கள் எழுப்புகின்றனர். விலைவாசி உயர்வு, செயல்படாத பிரதமர் அலுவலகம், கட்சிக்குள்ளேயே தலைமை பதவிக்கான போட்டி காரணமாக, எந்தப் பிரச்னைக்கும் நடவடிக்கை எடுக்காமல் பிரதமர் இருப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறின. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கின் மவுனத்திற்கான காரணத்தை கூறும் வகையிலும், மக்களின் வாக்குகளை பெறும் வகையிலும், 'பேச்சைக் குறை, தேவையானதை மட்டும் பேசு' (கம் போலா, காம் போலோ) என்ற, ஸ்லோகனை, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவும், ராகுலும் கூறி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE