தேவகோட்டையில், அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் பேசிய பலரும், 'சிவகங்கை லோக்சபா தொகுதி வேட்பாளர், செந்தில்நாதன், இரண்டு லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்; வெற்றி பெற வைப்போம்' என, பலரும் உணர்ச்சி பொங்க கூறினர். தொடர்ந்து, வழக்கறிஞர் பிரிவு இணை செயலர் ராமநாதன் பேசுகையில், ''இப்படித் தான் முன்னாள் அமைச்சர் காளிமுத்து, எம்.பி., தேர்தலில் நிற்கும் போது பேசினீர்கள். தேர்தல் எண்ணிக்கை முடிந்த பின், காரைக்குடியில் லாட்ஜ்க்கு வந்த அண்ணன் காளிமுத்து, பல பூத்களில், மதியத்திற்கு மேல் ஆட்களே இல்லை எனக்கூறி, கதறி அழுதது, இன்றும் எங்கள் நினைவில் நிற்கிறது. இனிமேல் இரண்டு லட்சம் என்று பேச்சில் காட்டாமல், செயலில் காட்டுங்கள்,'' என்றார். 'கட்சியினர் அப்போது விலை போனது போல, தற்போதும், அதே 'நிதி' மிகுந்த வலுவான எதிர்வேட்பாளரிடம், விலை போய்விடக் கூடாது' என்பதை, நாசூக்காக போட்டு உடைத்து விட்டார், ராமநாதன் என்கின்றனர் நிர்வாகிகள்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE