கோவை லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் வழக்கறிஞர் நாகராஜை ஆதரித்து, சிரிப்பு நடிகர்கள் சிங்கமுத்து மற்றும் செந்தில் ஆகியோர், கோவை சவுரிபாளையம், ஒண்டிப்புதூர், சூலூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், வேனில் பிரசாரம் செய்தனர்.
நடிகர் சிங்கமுத்து பேசுகையில், ''முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., கண்டெடுத்த புதையல் ஜெயலலிதா; அவரால் மட்டுமே, இந்தியாவை திறம்பட வழிநடத்தி செல்ல முடியும். எனவே, அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்,'' என்றார். நடிகர் செந்தில் பேசுகையில், ''தமிழக மக்கள் மட்டுமின்றி, நாட்டில் உள்ள அனைத்து மாநில மக்களும், ஜெயலலிதாவே பிரதமராக வரவேண்டும் என, நினைக்கின்றனர். சொன்ன வாக்குறுதிகளையும், சொல்லாததையும் செய்பவர், ஜெயலலிதா. சிலர் ரேஷன் பொருட்களை வீட்டுக்கே கொண்டு வந்து தருவதாக வாக்குறுதி அளிப்பர். இன்னும் பலர் பல்வேறு வாக்குறுதிகளை அளிப்பர். எனவே, போலி வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து விடாதீர்கள்,'' என்றார்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE