ஆரணி லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுகக் கூட்டம், போளூரில் நடந்தது. கூட்டத்தில் வேட்பாளர் ஏழுமலை பேசத் துவங்கியதும் கூட்டத்திலிருந்த நிர்வாகிகள் கலைந்து சென்றனர். ஆரணி லோக்சபா தொகுதிக்கு சீட் கேட்டு போளூர் சட்டசபை தொகுதியிலிருந்து 35 பேர் விருப்ப மனு செய்திருந்தனர். ஆனால், இரண்டு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி உள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழுமலைக்கு சீட் கொடுத்ததால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே நிர்வாகிகள் பலர் கூட்டத்தை புறக்கணித்துச் சென்றதாக நிர்வாகிகள் தரப்பில் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE