தூத்துக்குடி: தூத்துக்குடி அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ நட்டர்ஜியை ஆதரித்து, 2 நாட்களுக்கு முன்பு, நடிகர் தியாகு பிரசாரம் செய்தார். நேற்று முன் தினம் நடிகர் வையாபுரி தூத்துக்குடி நகர பகுதிகளில் பிரசாரம் செய்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது, உரிய அனுமதியில்லாமல் பிரசாரம் செய்ததாக, நடிகர்கள் தியாகு, வையாபுரி, மாநகர செயலாளர் ஏசாதுரை, மருத்துவர் அணி ராஜசேகரன், வார்டு கவுன்சிலர்கள் ஜெயக்குமார், தனராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE