கூடலூர்: ' நீலகிரிக்கு என எந்த திட்டத்தையும் ஜெயலலிதா நிறைவேற்ற வில்லை' என, ஆ.ராசா கூறினார். நீலகிரி லோக்சபா தி.மு.க., வேட்பாளராக மீண்டும் நிறுத்தப்பட்டுள்ள ஆ.ராசா, நேற்று கூடலூர் நகரில் பிரசாரம் மேற்கொண்ட போது பேசுகையில்,"நீலகிரி மாவட்டத்துக்காக, முதல்வர் ஜெயலலிதா எந்த திட்டத்தை நிறைவேற்ற வில்லை. அவர் கொண்டு வந்த மின் திட்டத்துக்கும், மத்திய அரசின் அனுமதி கிடைக்காது. அனுமதி பெற்று திட்டத்தை துவங்கினால், நான் போட்டியில் இருந்து விலகுவேன். அத்திகடவு திட்டத்தை நிறைவேற்ற தி.மு.க., ஆட்சியில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதனை நிறைவேற்ற ஜெயலலிதா எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இத்திட்டம் குறித்து நான் பேசியதை தொடர்ந்து, 'அந்த திட்டத்துக்கு மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை' என கூறுகிறார்,” என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE