சிவகங்கையில் அ.தி.மு.க., ஊழியர்கள் கூட்டம் நடந்தது. வரவேற்று பேசிய நகர செயலர் ஆனந்தன், தொகுதி தேர்தல் பொறுப்பாளர் அமைச்சர் உதயகுமாரை பார்த்து, 'நமது பொறுப்பாளர், வாழும் அறிஞர் அண்ணா' என, புகழ்ந்தார். அதிர்ந்த அமைச்சர், விழா எப்போது முடியும் என, காத்திருந்தார். விழா முடிந்ததும், நகர செயலரை அழைத்து கடிந்து கொண்டார். 'முதல்வரை தவிர, என்னை எல்லாம் புகழ்ந்து பேசுவதை இனிமேல் தவிர்த்துக் கொள்ளுங்கள். முதல்வர் தான், நம் அனைவரையும் வழி நடத்துகிறார்' என்றார். அருகில் இருந்த கழகத்தினர் அமைச்சர் என்றால், எவ்வித புகழுக்கும் மயங்காமல், இப்படித் தான் இருக்கவேண்டும் என, பேசிக்கொண்டனர். 'ஆமா ஒரு முறை சூடுபட்டவர் ஆச்சே!' என்றார் அனுபவ அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE