பெரம்பலூர் தொகுதி, தி.மு.க., வேட்பாளராக சீமானூர் பிரபுவை கட்சி தலைவர் கருணாநிதி அறிவித்தார். தொகுதிக்குட்பட்ட துறையூர் ஒன்றிய தி.மு.க., செயலர் வாசுதேவன் இரு நாட்களுக்கு முன் இறந்தார். கடந்த 21 ஆண்டுகளாக ஒன்றிய செயலர் பொறுப்பு வகித்த கட்சியின் சீனியரான வாசுதேவன் இறந்தது, தொகுதியில் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வாசுதேவன் சொந்த ஊரான நாகலாபுரத்தில் இறுதி சடங்கு நடந்தது. இதில், திருச்சி மாவட்ட, தி.மு.க., செயலாளர் நேருவுடன், சீமானூர் பிரபுவும் பங்கேற்றார். இதன் மூலம் பெரம்பலூர் தொகுதி வெற்றி உறுதி என, உடன்பிறப்புகள் பேசினர். இதற்கு உடனடியாக பதிலடி கொடுக்கும் வகையில் எதிர்க்கட்சியினர், 'முதல் நிகழ்ச்சியே இறுதி சடங்கில் பங்கேற்றதால், அவரது வெற்றிக்கு அவரே சங்கு ஊதிக்கொண்டார்' என, பேசுகின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE