மீனவர் நலனுக்கான புதிய துறையின் அமைச்சராகிறார் இல.கணேசன்?

Updated : ஜூன் 10, 2014 | Added : ஜூன் 09, 2014 | கருத்துகள் (59) | |
Advertisement
மத்திய அரசில், மீனவர்கள் நலனுக்காக, புதிய அமைச்சகம் துவக்கப்பட உள்ளது. இந்த துறையின் அமைச்சராக, தமிழகத்தைச் சேர்ந்த, இல.கணேசன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழக மீனவர்கள் பிரச்னை உட்பட, நாட்டின் கடலோர பகுதிகளில் வாழும், மீனவர்கள் பிரச்னை மத்திய அரசுக்கு, கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக, கடலுக்கு மீன்
மீனவர் நலனுக்கான புதிய துறையின் அமைச்சராகிறார் இல.கணேசன்?

மத்திய அரசில், மீனவர்கள் நலனுக்காக, புதிய அமைச்சகம் துவக்கப்பட உள்ளது. இந்த துறையின் அமைச்சராக, தமிழகத்தைச் சேர்ந்த, இல.கணேசன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழக மீனவர்கள் பிரச்னை உட்பட, நாட்டின் கடலோர பகுதிகளில் வாழும், மீனவர்கள் பிரச்னை மத்திய அரசுக்கு, கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக, கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும், தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு ஆளாகாமல் திரும்பி வந்தாலே, அது பெரிய அதிர்ஷ்டமாகவே கருதப்படுகிறது.இப்படி தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை ராணுவத்தினரின் கொடூரங்களைச் சந்திப்பதால், இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னை குறித்து, லோக்சபா தேர்தலுக்கு முன்னரே, நரேந்திர மோடியிடம், தமிழக பா.ஜ., தலைவர்கள் எடுத்துரைத்தனர்.அதனால், 'பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், தமிழக மீனவர்கள் பிரச்னை உட்பட, நாட்டின் ஒட்டுமொத்த மீனவர்கள் பிரச்னையையும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரச்னை காரணமாகவே, தனது பிரதமர் பதவியேற்கும் விழாவுக்கு வரும்படி, சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு, மோடி அழைப்பு விடுத்தார். குறிப்பாக, இலங்கை அதிபர் ராஜபக் ஷேக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது.

அந்த அழைப்பை ஏற்று, பதவியேற்பு விழாவில் பங்கேற்ற, ராஜ்பக் ஷேயிடம், பேச்சுவார்த்தை நடத்திய மோடி, 'தமிழக மீனவர்கள் பிரச்னையை தீர்க்க வேண்டும். அதற்கு, இலங்கை அரசு பல விஷயங்களில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்' என, தெள்ளத்தெளிவாக தெரிவித்தார்.இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின், ஒரு சில நாட்கள் மட்டுமே, இலங்கை ராணுவம் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டது. அதன்பின், தன் அத்துமீறலை துவக்கி உள்ளது. இதனால், தமிழகத்தில் மீண்டும் கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகி உள்ளது.இப்படி மீனவர்கள் பிரச்னை தொடர் கதையாகி வருவதால், மத்திய அமைச்சரவையில் மீனவர் நலனுக்காக, புதிய துறை ஒன்றை ஏற்படுத்தி, அதற்கு அமைச்சர் ஒருவரை நியமிக்க, பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து, மத்திய அரசு வட்டாரங்களில் கூறியதாவது:
நாட்டின் சில மாநில மீனவர்கள் அடிக்கடி, அண்டை நாட்டு கடற்படையினரால் தாக்குதலுக்கு ஆளாகின்றனர் அல்லது சிறை பிடிக்கப்படுகின்றனர்.இது, பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. குறிப்பாக, இலங்கை ராணுவத்தால், தமிழக மீனவர்களுக்கு தினமும் பிரச்னைகள் உருவாகிறது. இந்தப் பிரச்னையை வெளியுறவு அமைச்சகம் கவனித்தாலும், அதனால், நிரந்தர தீர்வு காண முடியவில்லை.எனவே, மீனவர்கள் பிரச்னையை தீர்த்து, அவர்களின் நலன்காக்க தனியாக ஒரு துறையை ஏற்படுத்தவும், அதற்காக அமைச்சர் ஒருவரை நியமிக்கவும், பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.இப்படி உருவாக்கப்படும் துறைக்கும், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், அமைச்சராக நியமிக்கப்பட உள்ளார். அனேகமாக, தமிழக பா.ஜ., மூத்த தலைவரான, இல.கணேசனுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படலாம். அப்படி நடக்காத பட்சத்தில், மோடியின் நேரடி அபிமானம் பெற்ற வானதி சீனிவாசன், அந்த பொறுப்பில் நியமிக்கப்படலாம்.இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது சிறப்பு நிருபர்-

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (59)

Tamilselvan - Chennai,இந்தியா
10-ஜூன்-201406:05:07 IST Report Abuse
Tamilselvan இல கணேசனுக்கும் மீனவருக்கும் என்ன சம்பந்தம் ? மஞ்சள் துண்டு கும்பலுக்கும் மக்களுக்கும் ,அம்மாவாசைக்கும் அப்துல்காதருக்கும் உள்ள சம்பந்தம் தான் இவருக்கும் மீனவருக்கும் உள்ள சம்பந்தம்.
Rate this:
Cancel
Gunasekar - hyderabad,இந்தியா
09-ஜூன்-201422:48:31 IST Report Abuse
Gunasekar சொல் வன்மை பொருந்திய, இந்திய நலன் விரும்பி. பதவி கிடைத்தால் , திறம்பட செய்பவர் .
Rate this:
Cancel
M U R A L I - chennai,இந்தியா
09-ஜூன்-201419:51:29 IST Report Abuse
M U R A L I பிஜேபி இன்று வளர்ந்துவிட்ட ஆட்சியில் உள்ள கட்சி. இல.கணேசன் அவர்கள் நீண்ட நாட்களாக அக்கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருபவர். அவர் கருணாநிதியின் ஆதரவாளர் அல்ல. அவரையும் அனுசரித்து செல்பவர். அதுவும் ஜெயலலிதா வாஜ்பாய் அவர்களின் ஆட்சியை கவிழ்த்த சூழ்நிலையில் பிஜேபி கருணாநிதியின் ஆதரவு தேவைப்பட்டதால், அதை இல.கணேசன் அனுசரித்து அரசியல் செய்யவேண்டியதாயிற்று. கருணாநிதி தான் ஒரு முதல்வராக இருந்தும் இல.கணேசனின் அறிவுக்கூர்மையைப் பார்த்தும், அல்லது எதிர்கால அரசியலுக்கு உதவும் என்றோ கணக்குப்போட்டு இல.கணேசன் அவர்களின் வீடு தேடி வந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லுமளவுக்கு ஒரு நட்பை அவரிடம் வளர்த்துக்கொண்டார். கட்சிகளின் விருப்பு வெறுப்புக்களைத் தாண்டிய நட்பில் என்ன தவறு இருக்கிறது? இல.கணேசன் தான் கொண்ட கொள்கையில் என்றுமே மாறாதவர். இவரைவிட ஜூனியரான மைத்ரேயன் கூட அதிமுக வில் சேர்ந்து இன்றைக்கு பல்வேறு பதவிகளை அடைந்துவிட்டார். இல.கணேசன் நினைத்திருந்தால் அவரது திறமைக்கு எந்தக் கட்சியில் சேர்ந்தாலும் அவருக்கு பதவிகள் கிடைத்திருக்கும். அப்படியெல்லாம் செய்ய அவர் மனதால் கூட நினைக்கமாட்டார். பிஜேபி யில் நிறையப்பேர் திறமையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் மூத்தவர் இல.கணேசன். அதனால் அவர் பல பதவிகளை பெறவேண்டும். தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பார், கருணாநிதியில் கள்ளத்தனமான அரசியல் வித்தைகளுக்கு நிச்சயம் துணை போக மாட்டார். ஜெயலலிதா போன்றவர்கள் மாற்றுக்கட்சியில் உள்ள மதிப்புமிக்கவர்களை மதிக்கத் தவறியதால் வந்த வினை இது. அதனால் இல. கணேசன் அவர்களை வாழ்த்துவோம். அவருக்கு மீனவர் துறையை விட வேறு ஏதாவது நல்ல துறை கிடைத்தால் சிறப்பாக இருக்க்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X