கோயம்புத்தூர்னாலே "காஸ்ட்லி சிட்டி' என்பது ஊரறிந்த விஷயம்; அதிலும் "ரிச்' ஆன ஏரியா எதுவாயிருக்கும் என்று தெரிந்து கொள்ள எல்லோருக்கும் ஆசை இருக்கும். கோவையின் இதயப் பகுதியாகக் கருதப்படும் ரேஸ்கோர்ஸ் பகுதி, குடியிருப்புப் பகுதிகளிலேயே மதிப்பு மிக்க பகுதியாக இன்று வரை கோவைவாசிகளால் ...
குகைகளை விட்டு வெளியேறிய ஆதி மனிதர்கள் ஆற்றுப்படுகையை அடைந்த பிறகுதான் நாகரிக வாழ்க்கையை வாழத்துவங்கினர் என்கிறது வரலாறு. இந்திய வரலாற்றை ஆய்வு செய்த அறிஞர்கள் பலர் "நதிக்கரைகள்தான் நாகரிகத்தின் தொட்டில்' என்று வர்ணிக்கின்றனர்.கொங்கு நாட்டின் நாகரீகத் தொட்டிலாக விளங்கிய நொய்யல் ...
ஒரு சாராருக்கு சாதகமாக எழுதப்பட்ட சரித்திரங்களால், நாடாண்டவர்கள் நடுத் தெருவுக்கு வந்ததுண்டு. உலக வரலாறை வாசித்தவர்களுக்கு இந்த உண்மை புரியும். கோவைக்கிழார் என்கிற மனிதர் இல்லாமல் போயிருந்தால் கோவையின் வரலாறுக்கும் அப்படிப்பட்ட அபாயம் நேர்ந்திருக்க வாய்ப்புண்டு.யார் இவர்? 1888 நவம்பர் 30ம் ...
தமிழிலும் கொங்குத் தமிழுக்கென்று ஓர் உயர்ந்த இடமுண்டு. அந்த கொங்கு மண்ணிலே தமிழ்க் கடவுளான முருகன் வீற்றிருக்கும் உயர்ந்த மலைதான், மருதமலை. அரிய மூலிகைகளையும், அற்புதமான மரங்களையும் கொண்ட குளுமையான இந்த மலைக்கு "மருந்து மலை' என்றும் ஒரு பெயருண்டு.ஒலி எழுப்பும் தன்மையுடைய மரங்களும் ...
"மேற்கு தொடர்ச்சி மலையும், அதன் காடுகளும், அங்குள்ள உயிரினங்களும் இயற்கை அன்னை நமக்கு அளித்திருக்கும் அரிய வரங்கள். அவற்றை நாம் இழந்து விடக்கூடாது. அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் இடம் பெறச் செய்ய வேண்டும். அதற்கான பணியைத்தான் நாங்கள் செய்து வருகிறோம்,'' என்கிறார் ...
ஒரு சிறையால் ஊருக்கே நன்மை கிடைக்கிறது என்றால், அது எத்தனை பெரிய சிறப்பு?. அந்த சிறப்பை உடைய சிறை, கோவை மத்திய சிறைதான். கோவையில் வலம் வரும் பல லட்சம் வாகனங்கள் கக்கும் கரியமில வாயுவை, பிராணவாயுவாக மாற்றும் பல ஆயிரம் மரங்களைக் கொண்டிருப்பதுதான் இந்த சிறையின் சிறப்பு.சாலை விரிவாக்கம், கட்டுமானப் ...
கோவையில் நவீன தமிழ் படைப்பிலக்கிய சிந்தனையை வளக்கும் நோக்கத்தோடு கவிஞர் முத்தமிழ் விரும்பி, மீனாட்சிசுந்தம் ஆகியோர் இணைந்து "நெருஞ்சி இலக்கிய முற்றம்' என்ற இலக்கிய அமைப்பை நடத்தினர்.லண்டனில் வசித்து வரும் எழுத்தாளர், யமுனா ராஜேந்திரன், இலங்கை எழுத்தாளர் எஸ்.பொன்னுச்சாமி, பிரேம் ரமேஷ், ...
அறிவியல் தொழில் நுட்பத்துக்குப் பெயர் பெற்ற கோயம்புத்தூர், ஆன்மிக பூமியாகவும் திகழ்கிறது. இங்குள்ள கோவில்களே இதற்கு சாட்சி...காவல்தெய்வம்: கோவையின் காவல் தெய்வமாகக் கருதப்படும் கோனியம்மன் கோவில் திருவிழா, இந்த நகரின் தலை சிறந்த விழாவாகும். கோவன்புத்தூரை ஆட்சி செய்த கோவனுக்கு குலதெய்வம் ...
ஊர் என்றிருந்தால் அதற்கொரு பேர் இருக்கும்; அதற்கொரு கதையும் இருக்கும்; வாழ்க்கையின் நெருக்கடிகளில் உதை பட்டுத் தவிக்கும் நமக்கு அந்தக்கதையை தெரிந்து கொள்ள ஏது நேரம்? கோவை தினமான இன்று, இங்குள்ள ஒவ்வொரு ஊரின் பெயர்க்காரணத்தையும் நீங்கள் அறிந்து கொள்ள...ஒப்பனை இல்லாத வீதி!: யானைக்கு ...
கோவை வரலாறை எழுத்துகளில் பதிவு செய்தவர்களில், கோவை கிழார் எனும் ராமச்சந்திரன் செட்டியார் முதன்மையானவர். அவரைத் தவிர இன்னும் பலரும், கோவையைப் பற்றிய தங்கள் பார்வையை பதிவு செய்துள்ளனர். கோவை, கொங்கு நாட்டின் அங்கம் என்பதால் கொங்கு நாட்டு வரலாற்றை எழுதியவர்களையும் அறிவது அவசியமாகிறது. ...
கோவை ஆர்.எஸ்.புரம் பொன்னுரங்கம் ரோட்டில் அழகிய சமண ஆலயம் உள்ளது. கோவையில் உள்ள சுவேதாம்பர சமண சங்கத்தினரால், சமண சமயத்தின் 23 வது தீர்த்தங்கரரான பார்சுவநாதருக்காக 1981ம் ஆண்டில் இது நிறுவப்பட்டது. நாளடைவில் விரிவுபடுத்தப்பட்டு, இப்போது பளிங்கினால் ஆன மாளிகையாக பளிச்சிடுகிறது.இங்கு வழிபாட்டிற்கு ...
கோவை அரசு கலைக் கல்லூரி, 1852ல் சாதாரண பள்ளியாக துவங்கப்பட்டது. அப்போது அதன் பெயர் "பிரெஞ்சு ஸ்கூல்'. கோவையில் ஆங்கிலம் கற்பிக்கும் நோக்கத்துடன் துவக்கப்பட்ட இப்பள்ளியை, அன்றைய மாவட்ட கலெக்டர் தாமஸ், "ஆங்கிலோ வெர்னாகுலர் பள்ளி' என பெயர் மாற்றினார். பின்னர் தாமஸ் ஆங்கிலோ இந்திய பள்ளி என ...
இன்றைய கோவையில் பெண்களுக்குதான் அதிக பள்ளிகள்; 1832 லேயே பெண்களுக்கென கோவை உப்பிலிபாளையத்தில் முதல் பள்ளி உருவாகிவிட்டது. அப்போதைய கலெக்டர் சல்லிவனும், ஆடிஸ் பாதிரியாரும் சேர்ந்து இப்பள்ளியைத் துவக்கினர். 1951ல் இப்பள்ளி "மாதர் கல்வி நிலையம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.1983ல் தென்னிந்திய ...
அவ்வையார், சேரமான் கணைக்கால் இரும்பொறை, பாலை பாடிய பெருங்கடுங்கோ போன்ற பழம் பெரும் புலவர்கள் வாழ்ந்த கொங்கு நாட்டில் கவிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் எப்போதும் பஞ்சமில்லை. நாம் வாழும் காலத்தில் தமிழ் மொழிக்கும், கோவை மண்ணுக்கும் தன் இலக்கிய படைப்புக்களால் பெருமை சேர்த்த மூத்த ...
தமிழகத்தின் முதல்வராக இருந்த ஒருவர்... முதல்வராக இருக்கும் போதே, கோவை ராமநாதபுரத்தில் இருந்து நஞ்சுண்டாபுரம் வரை நடந்தே சென்றார் என்கிற செய்தியை உங்களால் நம்ப முடிகிறதா? தமிழகமே கொண்டாடிய... இன்றைக்கும் கொண்டாடுகிற அந்தத் தலைவர் அன்றைக்கு நடந்தது அரசியல் காரணங்களுக்காக அல்ல; வேறெதற்கு?இந்த ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.