ரோட்டரி இலங்கை மாவட்ட - 3220 ஆளுநர் அருணி மலலசேகர 15-01-2022 அன்று திருகோணமலை ரோட்டரி கழகத்துக்கு விஜயம் செய்தார். ஆளுநரின் ஆளுநரின் துணை செயலாளர் ஜெயக்குமார், உதவி ஆளுநர் டாக்டர் கருணாகரன் இணைந்து கொண்டார்கள். திருகோணமலை ரோட்டரி கழக தலைவர் - த அகிலன் விருந்தினர்களை வரவேற்று, வரவேற்புரையை நிகழ்த்தினார். செயலாளர் க பிரபாகரனால் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைகளின் அறிக்கை பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை கொடுத்தார்.
தி / ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வெற்றியாளர் எம்.அகன்ஷா ரொக்க விருது மூலம் பாராட்டப்பட்டு கௌரவிக்கப் பட்டார். தலைவர் அகிலனால் புல் வெட்டும் இயந்திரம் ஓன்று வேலாயுதத்திற்கு வழங்கப் பட்டது. தி / கணேச வித்யாலயம் - தி / தங்கபுரம் பாடசாலையின் தலைமையாசிரியர்கள் “கிராமப் பள்ளிகளுக்கு கணனி” என்ற திடடத்தின் கீழ் கணினிகளைப் பெற்றுக் கொண்டனர். மேலும் 6 பாடசாலைகளுக்கு உரிய நேரத்தில் வழங்கப் படும்.
ஆளுநரின் துணை செயலாளர் ஜெயக்குமாரால் மாவட்ட ஆளுநர் அறிமுகப்படுத்தப்பட்டார். ஆளுநர் அருணி மலலசேகர, தமது உரையில் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைகளை பாராட்டியதுடன் மேலும் அதிக தரமான இளம் உறுப்பினர்களைச் சேர்க்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார். புதிய திட்டங்களை உருவாக்கி மக்களுக்கு சிறந்த சேவை செய்வதுடன், மக்கள் மத்தியில் ரோட்டரி பெயரை எடுத்து செல்ல வேண்டும் என எடுத்துரைத்தார்
2022-2023 வருடத்துக்கான தலைவராக தெரிவு செய்யப்படட கிட்டினதாஸ் நன்றியுரை நிகழ்த்தினார்.
- நமது செய்தியாளர் ஞானகுணளன்
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.