கிழக்கிலங்கையின் வழிபாட்டு தலங்கள்- தான்தோன்றீஸ்வரம் | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

கிழக்கிலங்கையின் வழிபாட்டு தலங்கள்- தான்தோன்றீஸ்வரம்

மார்ச் 03,2022 

Comments

இலங்கையில் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு நகருக்கண்மையுள்ள கொக்கட்டிச்சோலை கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். இலங்கையில் உள்ள இரண்டு தான்தோன்றீச்சரங்களில் இதுவும் ஒன்று.

போர்த்துக்கேயர் ஆட்சிக் காலத்தில் "புல்லுண்ட கல் நந்தி" இக்கோவிலின் பெருமைகளில் ஒன்றாக விளங்குகின்றது. அதாவது வெள்ளையர்களால் ஈழத்தில் சைவ சமயகோவில்கள் உடைத்துத் தரமட்டமாக்கப்பட்ட போது இவ் கோவிலையும் விட்டு வைக்க விரும்பாத வெள்ளையர்கள் கோவிலை உடைக்க வந்தார்கள். குருக்களுடன் வெள்ளையர்களுக்கு இடம்பெற்ற விவாதத்தில் இந்த கல் நந்தி புல்லுண்ணும் என்ற குருக்களின் கூற்றை நிரூபிக்க ஆலயத்தின் கல் நந்தி எழுந்து காலால் மண்ணை எற்றி தனுப்போட்டு கொடுக்கப்பட்ட புல்லை உண்டு வெள்ளையர்களை மெய்மறக்க வைத்து புறமுதுகு காட்டி ஓடவைத்த வரலாற்றுப்பெருமை இவ் ஆலயத்துக்கு உண்டு.

மகா சிவராத்திரியை முன்னிட்டு இலங்கை சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தால் ரூபாய் 9 கோடி செலவில் திருமந்திர அரண்மனை அமையப்பெறவுள்ளது. அதற்காக கொண்டு வரப்பட்ட கருங்கல்லால் ஆன 108 சிவலிங்க விக்கிரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதை கொக்கட்டிச்சோலை ஆலயத்திற்கு வழங்கியவர் சிவபூமி அறக்கட்டளை, மற்றும் தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானம் ஆகியவற்றின் தலைவரான கலாநிதி ஆறு. திருமுருகன்.

சிவராத்திரி தினத்தன்று இந்த சிவலிங்கங்கள் கொக்கட்டிச்சோலை வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டு பிரதிஸ்ட்டை செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகளில் இலங்கை சிவபூமி அறக்கட்டளை நிறுவனமும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையினரும் மேற்கொண்டுள்ளனர். கலாநிதி ஆறு திருமுருகனின் சமூக சமயப்பணிகள் பற்றி இலங்கையில் அறியாதவர்கள் மிகச்சிலரே. தங்கம்மா அப்பாக்குட்டி மறைவிற்கு பின்னர் 2008ஆம் ஆண்டிலிருந்து துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவராக இருந்து அந்த ஆலயத்தை நிர்வகித்து வருகிறார்.

சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தை நிறுவிய அவர் சிவபூமி மனவிருத்தி பாடசாலை, சிவபூமி முதியோர் இல்லம், கீரிமலை உட்பட சில இடங்களில் சிவபூமி மடங்கள், நாவற்குழி திருவாசக அரண்மனை, சிவபூமி அரும்பொருட் காட்சியகம், ஆகியவற்றை நிறுவி அவற்றை திறம்பட நடத்தி வருகிறார். சுழிபுரம், நாவற்குழி ஆகிய இடங்களில் விவசாய பண்ணைகளை நிறுவி பலருக்கு வேலை வாய்ப்பை வழங்கியிருக்கிறார். ஈழத்தில் உள்ள சிவ ஆலயங்களுக்கும் இவர் உதவி வருகிறார். இவரின் சமய சமூக பணிகளுக்காக யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கியது. இந்த வருட முற்பகுதியில் திருகோணமலை மண்ணில் வைத்து திருக்கோணநாதனின் ஆசியுடன், திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தா சோ.இரவிச்சந்திரக்குருக்களினால் "இராவண சேனை" அமைப்பின் "இளங்கேசன்" விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

- நமது செய்தியாளர் ஞானகுணாளன்


Advertisement
மேலும் ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

தாம்பாவில் கீர்த்தனா முத்துக்குமார் பரத நாட்டிய அரங்கேற்றம்

தாம்பாவில் கீர்த்தனா முத்துக்குமார் பரத நாட்டிய அரங்கேற்றம்...

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் புரட்டாசி சனிக்கிழமை பூஜைகள்

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் புரட்டாசி சனிக்கிழமை பூஜைகள்...

துபாயில் மாணவிகளுக்கான சர்வதேச திருக்குர்ஆன் போட்டி

துபாயில் மாணவிகளுக்கான சர்வதேச திருக்குர்ஆன் போட்டி...

2023 புனித ஹஜ்ஜில் சேவை ஆற்றிய தன்னார்வலர்கள் கவுரவிப்பு

2023 புனித ஹஜ்ஜில் சேவை ஆற்றிய தன்னார்வலர்கள் கவுரவிப்பு...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us