பிரான்ஸ் தமிழ்ச் சங்கத்தின் 53ஆவது பொங்கல் விழா பிரான்சில் நடைபெற்றது. பிரான்சின் தலைநகரம் பாரீசுக்கு அடுத்துள்ள மலகோப் நகரத்தில் பிரான்ஸ் தமிழ்ச் சங்கத்தின் 53 ஆவது ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது. பிரான்ஸ் தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் பா.தசரதன் அனைவரையும் வரவேற்றார். தமிழ்ச் சங்கப் பொதுச்செயலாளர் கோகுலன் கருணாகரன் தலைமை தாங்கினார், சங்க துணைத்தலைவர் தளிஞ்சன் முருகையன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் மலகோப் நகர மன்ற தாய் ஜக்குலின் பெலோம் உரையாற்றினார். திரான்சி நகர மன்ற உறுப்பினர் அலன் ஆனந்தன், பிரபாகரன், சித்தாரா அமைப்பின் தலைவர் தம்புசாமி கிருஷ்ணராஜ், பாவலர் அருணா செல்வம் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். தளிஞ்சன் முருகையன் பொங்கலை பற்றி சிறப்புரையாற்றினார்.
பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பிரான்சில் வாழும் தமிழ் மக்களும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். நிறைவாக சங்கத் துணைப்பொருளாளர் எலிசபெத் அமல்ராஜ் நன்றி தெரிவித்தார்.
- ஜெய்ஸ், பிரான்ஸ் தமிழ்ச் சங்க செய்தித்தொடர்பாளர்
தாய்லாந்தில் இந்துக் கோவில்கள் மற்றும் முகவரிகள்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.