துபாயில் ஓட்டப் போட்டி: நாகர்கோவில் வீரருக்கு இரண்டாம் இடம் | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

துபாயில் ஓட்டப் போட்டி: நாகர்கோவில் வீரருக்கு இரண்டாம் இடம்

பிப்ரவரி 04,2023 

Comments

துபாய் : துபாய் நகரில் ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் மாரத்தான் உள்ளிட்ட பல்வேறு ஓட்டப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்களும், அமீரகம் உள்ளிட்ட பிற நாட்டு வீரர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். துபாய் மெய்தான் பகுதியில் பத்து கிலோ மீட்டர், ஐந்து கிலோ மீட்டர், மூன்று கிலோ மீட்டர் மற்றும் 1 கிலோ மீட்டர் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தது.

இதில் ஐந்து கிலோ மீட்டர் பிரிவில் தமிழகத்தின் நாகர்கோவிலைச் சேர்ந்த இளைஞர் செய்யது அலி 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் இரண்டாம் இடம் பெற்றார். அவருக்கு துபாய் விளையாட்டு கவுன்சிலின் அதிகாரி ஒருவர் கோப்பை வழங்கி கௌரவித்தார். தமிழகத்தைச் சேர்ந்த செய்யது அலி அமீரகத்தில் மட்டுமல்லாது சமீபத்தில் மும்பை நகரில் நடந்த மாரத்தான் ஓட்டப் போட்டியிலும் பங்கேற்று அவரது வயதுக்கான பிரிவில் எட்டாம் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல்வேறு போட்டிகளிலும் ஓடி வரும் அவர் வரும் காலத்தில் ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதே தனது விருப்பம் என தெரிவித்தார்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மா்ச் 18 ல் வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல்- 4

மா்ச் 18 ல் வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல்- 4...

கோதாவரி, தம்பா

கோதாவரி, தம்பா...

சாம்பியா தமிழ் சங்க நிர்வாகிகள் 2023-2024

சாம்பியா தமிழ் சங்க நிர்வாகிகள் 2023-2024...

தான்சானியா தமிழ் சங்க (2023-2024) நிர்வாகிகள்

தான்சானியா தமிழ் சங்க (2023-2024) நிர்வாகிகள்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us