மஸ்கட்டில் உள்ள சுல்தான் காபூஸ் துறைமுகத்துக்கு இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ். தல்வாருக்கு ஓமன் கடற்படையின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த கப்பலை இந்திய தூதர் அமித் நாரங் பாரவையிட்டு அதன் அதிகாரிகளுடன் பேசினார்

அஜ்மான் இந்திய சங்கத்தில் தலைவர் அப்துல் சலா தலைமையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய துணை தூதரக அதிகாரி கே. காளிமுத்து சிறந்த பள்ளிக்கூட முதல்வர்கள், ஆசிரியர்களுக்கு விருது வழங்கினார்

பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமா வநத இந்திய முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்து இந்திய தூதரக வளாகத்தில் தேசப் பிதா மஹாத்மா காந்தியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்

ஈராக் நாட்டின் கர்பலாவில் அர்பயீன் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த யாத்ரீகர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இந்திய தேசிய கொடியுடன் ஊர்வலத்தில் பங்கேற்றனர்

கத்தார் நாட்டின் தலைநகர் தோஹா நகரில் சந்திராயன் 3 வெற்றி விழா இந்திய கலாச்சார மையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்திய தூதர் விபுல் கேக் வெட்டி சந்திராயன் 3 வெற்றியை இந்திய சமூகத்தினருடன் கொண்டாடினார்

77 வது இந்திய சுதந்திர தினத்தை நினைவில் கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்

ஷார்ஜா இந்தியன் அசோஷியேனில் நடைபெற்ற இந்தியாவின் 77வது சுதந்திர தின விழாவில் இந்திய துணை தூதரக அதிகாரி உத்தம் சந்த் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து இந்திய குடியரசுத்தலைவரின் சுதந்திர தின உரையில் இருந்து முக்கிய பகுதிகளை வாசித்தார்

சௌதி அரேபியா ரியாத் நகரில் இந்திய தூதரகத்தில் 77வது இந்திய சுதந்திர தின விழாவை யொட்டி இந்திய தூதர் சுகைல் இஜாஷ்கான் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து, இந்திய ஜனாதிபதியின் சுதந்திர தின உரையை வாசித்தார். முன்னதாக மகாத்மா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்

அஜ்மான் அல் ஜர்ஃப் பகுதி இந்திய சங்கத்தில் இந்தியாவின் 77வது சுதந்திர தினம் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்திய துணை தூதரக அதிகாரி பிஜேந்தர் சிங் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்

துபாய் நகர பர்ஜுமான் மாலில் இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியாவின் கலை, கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியில் இந்திய துணை தூதரக அதிகாரி பிஜேந்தர் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

1 2 3 4 5 6 7 8 9 10
Dinamalar Newspaper
Telegram Banner
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us